ஸ்கீம் என்பதும் மேலாண்மை வாரியம் என்பதும் ஒன்று தானா?

supreme court of india - 2026

சென்ற ஆண்டு குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது குஜராத்தில் மக்கள் நலப் பணிகள் நடப்பதைச் சொல்லிக் காலம் தாழ்த்தியது தேர்தல் ஆணையம்.

அது போல கர்நாடகத் தேர்தல் அட்டவணையையும் சற்றுக் காலம் தள்ளிப் போட்டிருக்கலாம்.

ஏன் என்றால் அங்கு புதிய சட்டமன்றம் அமைக்க மே 30 வரை அவகாசம் இருக்கிறது.

மார்ச் 30 என்ற சுப்ரீம்கோர்ட் காலக்கெடு முடிவடைய மூன்று தினங்களே இருந்தபோது கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது.

இடைப்பட்ட நாற்பது தினங்களிலும் “இதோ-அதோ” என்று போக்குக் காட்டிக் கொண்டே இருந்தது புது டெல்லி.

சுப்ரீம்கோர்ட் உத்தரவை அமல்படுத்த ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

இப்போது “ஸ்கீம்” என்று தீர்ப்பில் இருந்த ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி மாய்மாலம் செய்கிறது மத்திய அரசு. அதற்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் போகிறது.

“ஸ்கீம்” என்பதற்கும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

அணைகளைத் திறக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பே மேலாண்மை வாரியம்.

அந்த அதிகாரம் இல்லை என்றால் பற்றாக்குறை காலத்தில் கர்நாடகா அணைகளைத் திறக்காது.

இதுவே கடந்த கால அனுபவம். எனவே தான் நாம் அதை வற்புறுத்துகிறோம்.

நதி நீர்த் தாவா சட்டத்தின் 6A. ஷரத்து அதைத் தெளிவாகச் சொல்கிறது.

6A. Power to make schemes to implement decision of Tribunal.—(1) Without prejudice to the provisions of section 6, the Central Government may, by notification in the Official Gazette, frame a scheme or schemes whereby provision may be made for all matters necessary to give effect to the decision of a Tribunal.

அதாவது “நடுவர் மன்றத்தின் முடிவைச் செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு அல்லது செயல்திட்டம்” என்பதே “ஸ்கீம்”.

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மேலாண்மை வாரியம் எப்படி அமைக்கப்படவேண்டும் என்று தெளிவாகக் கூறி விட்டது.

எனவே அணைகளைத் திறக்கும் அதிகாரம் பெற்ற ஒரு ஏற்பாடு தான் வறட்சிக் காலத்தில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும். ..

இத்தகைய செயல்திட்டத்தை இறுதி செய்வதில் மத்திய அரசிற்கு தன்னிச்சையான அதிகாரம் கிடையாது என்றே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (பக்கம் 463 பத்தி xix) தெளிவாக்கிவிட்ட பிறகு மத்திய அரசின் துறைகள் ஏன் குழப்புகின்றன?

கர்நாடகத் தேர்தலைத் தவிர வேறு காரணமே கிடையாது.

அதற்கான அட்டவணையை முன் கூட்டியே அறிவித்து அரசியல் சதுரங்கம் ஆடுகிறது புது டெல்லி.

இனி கர்நாடகாவில் புதிய அரசு அமைந்த பிறகு மறுபடியும் முதலில் இருந்து துவங்குவார்கள்.

தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டாலும் ஒரு புண்ணியமும் கிடையாது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகத் தேர்தல் நடத்தை விதிகள் தடையாக இருக்காது என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்தாலும், பூர்வாங்கப் பணிகளில் ஈடுபடவேண்டிய கர்நாடக அதிகாரிகள் புதிய அரசு அமையும் வரை காத்திருப்பார்கள்.

மத்திய அரசே ஏதாவது கண்துடைப்பு அமைப்பை நிறுவினாலும் அது வெற்றுக் காகிதமாகத் தான் இருக்கும்.

பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின், பூவிரி புதுநீர்க் காவிரி

என்று சங்கத் தமிழ்ப் பாடல் காவிரியை வர்ணிக்கிறது.

மணலோடு தங்கத் தாது இருந்த காரணத்தால் “பொன்னி” என்று அழைக்கப்பட்டாள் காவிரி மங்கை.

இனி அது கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

காவிரியில் கர்நாடகம் நீர் விடவில்லை என்றால் அது விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல. தமிழகத்தின் சுமார் 12 மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்னையும் கூட.

ஏற்கனவே காவிரிப் படுகையின் பல மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரைப் பாழ்படுத்தி விட்டது.

எனவே இப்போது தமிழகம் கிளர்ந்து எழவில்லை என்றால் இனி எந்நாளும் தாழ்வு தான்.

கருத்து: பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories