December 5, 2025, 5:25 PM
27.9 C
Chennai

அந்த பிச்சைக்காரம்மா எனக்கிட்ட ஆன்மிக பிட்சை!

beggar andhra - 2025

அடிக்கடி நான் காசி செல்வது வழக்கம். அப்படி கங்கா-காவிரி எக்ஸ்ப்ரஸில் செல்லும்போது, விஜயவாடா நிலையத்தில் வெளியே நடைமேடையில் இறங்கி, கிருஷ்ணா நதிக்கரையோரம் மலைமேல் அமர்ந்து அருள் புரியும் கனகதுர்க்கா தேவியை மானஸீகமாக வணங்கி நிற்பதும் வழக்கம்.

அப்படி ஒரு முறை இறங்கி சின்னதாய் சோம்பல் முறித்துக் கொண்டிருந்த நேரம். மெதுவாக என் அருகில் ஒரு வயதான, தர்மத்திற்காக கைகள் நீட்டும் பெண்மணி வந்து நின்று “நமஸ்காரம் ஸ்வாமி” என்றார்.

மெதுவாக பார்த்த நான் கைகளால் சட்டைப்பையை குடைந்து பார்த்தேன். சில்லறையாக இல்லை. ஒரு ஐந்து ரூபாய் நோட்டு எடுத்து அவரிடம் நீட்டினேன். 

மெதுவாக புன்னகையோடு தலையசைத்து, அதை மறுத்த அவர் “மீறு காசிகு வெள்ளுதுன்னாரா?” என்று தெலுங்கில் கேட்க, ‘அவுனம்மா’ என்றேன்.

மெதுவாக தன் இடுப்பிலிருந்த அழுக்கு மூட்டைக்குள் கையை விட்டு ஒரு கிழிந்த பணப்பையை எடுத்தார். அதில் விரலைவிட்டுத் தேடி ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களை மெதுவாக எண்ணி என்னிடம் நீட்டினார்.

நான் தயங்க தெலுங்கில் என்னிடம் “ஏ ஜென்மால நேனு சேஸின பாபமோ பிக்ஷ எத்தே ஈ நர ஜென்மம். இந்த ஜன்மத்த கடந்தேறி முக்தி கிடைக்கணும் இந்த சாராதாம்மாக்குன்னு எனக்காக பிரார்த்தனை செய்து கங்கைல சேர்த்துடுங்க” என்று கண்ணீரில் கண்கள் பளபளக்க என் கையில் கொடுத்துவிட்டு வணங்கி, மெதுவாக அடுத்த கம்பார்ட்மென்டின் ஜன்னலில் கைஏந்திய வண்ணம் நகர்ந்தார்.

வண்டி நகர்ந்ததை உணராமல் பேச்சற்று கனத்த இதயத்தோடு நின்றேன். உடன் வந்தவர்கள் அழைக்க ஓடி ஏறி இருக்கையில் அமர்ந்தேன். நான் நீட்டிய அந்த ஐந்து ரூபாய்த் தாளிலிலேயே அந்த ஐந்து ஒரு ரூபாய் காசுகளைப் பொதிந்து வைத்து கங்கையில் சாராதாம்மா பேர் சொல்லி பிரார்த்தனை செய்து காசுகளை தீபத்தோடு விட்டேன். 

நீட்டிய எனது கைகளின் மேல் காசுகளை வைத்த அந்த சுருங்கிய தோல் கொண்ட அவர் கைகளை என் மனக்கண்கள் மறக்கவேயில்லை. அவர் எனக்கு இட்ட பிச்சை அல்லது கட்டளையாக எடுத்துக் கொண்டேன். அவர் எண்ணம் நிறைவேறியிருக்கும்.
அந்த வாய்ப்பு இறை எனக்கிட்ட பிச்சை. !!

அனுபவம்: ஆங்கீரஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories