அந்த பிச்சைக்காரம்மா எனக்கிட்ட ஆன்மிக பிட்சை!

beggar andhra - 2026

அடிக்கடி நான் காசி செல்வது வழக்கம். அப்படி கங்கா-காவிரி எக்ஸ்ப்ரஸில் செல்லும்போது, விஜயவாடா நிலையத்தில் வெளியே நடைமேடையில் இறங்கி, கிருஷ்ணா நதிக்கரையோரம் மலைமேல் அமர்ந்து அருள் புரியும் கனகதுர்க்கா தேவியை மானஸீகமாக வணங்கி நிற்பதும் வழக்கம்.

அப்படி ஒரு முறை இறங்கி சின்னதாய் சோம்பல் முறித்துக் கொண்டிருந்த நேரம். மெதுவாக என் அருகில் ஒரு வயதான, தர்மத்திற்காக கைகள் நீட்டும் பெண்மணி வந்து நின்று “நமஸ்காரம் ஸ்வாமி” என்றார்.

மெதுவாக பார்த்த நான் கைகளால் சட்டைப்பையை குடைந்து பார்த்தேன். சில்லறையாக இல்லை. ஒரு ஐந்து ரூபாய் நோட்டு எடுத்து அவரிடம் நீட்டினேன். 

மெதுவாக புன்னகையோடு தலையசைத்து, அதை மறுத்த அவர் “மீறு காசிகு வெள்ளுதுன்னாரா?” என்று தெலுங்கில் கேட்க, ‘அவுனம்மா’ என்றேன்.

மெதுவாக தன் இடுப்பிலிருந்த அழுக்கு மூட்டைக்குள் கையை விட்டு ஒரு கிழிந்த பணப்பையை எடுத்தார். அதில் விரலைவிட்டுத் தேடி ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களை மெதுவாக எண்ணி என்னிடம் நீட்டினார்.

நான் தயங்க தெலுங்கில் என்னிடம் “ஏ ஜென்மால நேனு சேஸின பாபமோ பிக்ஷ எத்தே ஈ நர ஜென்மம். இந்த ஜன்மத்த கடந்தேறி முக்தி கிடைக்கணும் இந்த சாராதாம்மாக்குன்னு எனக்காக பிரார்த்தனை செய்து கங்கைல சேர்த்துடுங்க” என்று கண்ணீரில் கண்கள் பளபளக்க என் கையில் கொடுத்துவிட்டு வணங்கி, மெதுவாக அடுத்த கம்பார்ட்மென்டின் ஜன்னலில் கைஏந்திய வண்ணம் நகர்ந்தார்.

வண்டி நகர்ந்ததை உணராமல் பேச்சற்று கனத்த இதயத்தோடு நின்றேன். உடன் வந்தவர்கள் அழைக்க ஓடி ஏறி இருக்கையில் அமர்ந்தேன். நான் நீட்டிய அந்த ஐந்து ரூபாய்த் தாளிலிலேயே அந்த ஐந்து ஒரு ரூபாய் காசுகளைப் பொதிந்து வைத்து கங்கையில் சாராதாம்மா பேர் சொல்லி பிரார்த்தனை செய்து காசுகளை தீபத்தோடு விட்டேன். 

நீட்டிய எனது கைகளின் மேல் காசுகளை வைத்த அந்த சுருங்கிய தோல் கொண்ட அவர் கைகளை என் மனக்கண்கள் மறக்கவேயில்லை. அவர் எனக்கு இட்ட பிச்சை அல்லது கட்டளையாக எடுத்துக் கொண்டேன். அவர் எண்ணம் நிறைவேறியிருக்கும்.
அந்த வாய்ப்பு இறை எனக்கிட்ட பிச்சை. !!

அனுபவம்: ஆங்கீரஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories