ஒரு நூல் – ஒரு கருத்து: காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ…

 

காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ… என்ற அச்சம் தலைதூக்குகிறது. #தகுதியே_தடை

கடந்த வாரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் (OUP) வெளியிட்டுள்ள “Cost of Democracy – Political Finance in India”, Edited by Devesh Kapur, Milan Vaishnav எனும் நூலை படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த புத்தகத்தை படித்தபோது பணம் படைத்தவன் தான் தேர்தலில் நிற்க முடியும். காசு செலவு செய்தால் தான் வெற்றி பெற முடியும். இது தான் இன்றைக்கு தேர்தலில் நிற்கும் வேட்பாளரின் தகுதிகள். இது தான் தேர்தலின் சூத்திரமாக உள்ளது. இன்றைக்குத் தேர்தலில் நடப்பது தனி மனிதனின் ஆதாய – வியாபார (Trait Politics) அரசியல் களம் தான்.

பொது வாழ்வில் மக்கள் நலப் பணிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இப்படித் தான் தேர்தல் அரசியலின் போக்கு செல்கின்றனது என்ற வகையில் ஆதாரங்கள், தரவுகள், நிகழ்வுகள், புள்ளி விவரங்களோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நூலின் முதல் அட்டைப் படத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களோடு, விலைப்பட்டியல் போன்று அவர்கள் வாக்குக்கு கொடுக்கும் பணத்தையும், அவர்களின் சின்னத்தையும் படமாக போடப்பட்டுள்ளதைப் பார்க்கவே அவமானமாக உள்ளது. அதில் அதிகபட்சமாக ஒரு வாக்குக்கு ரூ. 8,000/- என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.democracy book - 2026

தேர்தலில் பணம் முக்கியக் காரணியாக இருந்து ஜனநாயகத்தை அழிக்கிறது என்பதன் நோக்கத்தை இந்த நூலில் சொல்ல நினைத்தாலும், அந்த நோக்கத்தை விட நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது மணல் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகள் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று இந்த நூலில் இலைமறைவு காயாக கூறுகின்றது.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

பண பலம், ஜாதி, புஜ பலம், ஆள் பலம், தகுதியற்ற தன்மை போன்ற நிலைப்பாடுகள் தான் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கிறது என்ற இந்த நூல் சம்பவங்களோடு சொல்கின்றது. இந்த நூலை சாதாரணமான பதிப்பகங்கள் வெளியிடவில்லை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூல்கள் வெளியிடும் குழுவிற்கு தொடர்புள்ள அறிஞர்கள், அனைத்தையும் ஆய்வுச் செய்து களப்பணிகள் செய்து எடுக்கப்பட்ட தரவுகள் பொய்யாகுமா? இதைப் படிக்க படிக்க நாமும் அரசியலில் இருக்கின்றோமா என்று வேதனைப்படத் தோன்றுகிறது.

ஐந்தாண்டுகள் தன்னுடைய சொந்தத் தொழிலைப் பார்த்துவிட்டு எந்த மக்கள் பணியிலும் ஈடுபடாமல் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம், சட்டமன்றம் ஏன் அமைச்சர் கூட ஆகிவிடலாம் என்ற நிலைப்பாடுகள் ஏற்புடையதுதானா? பொது வாழ்வில் எந்த தியாகமும் இல்லாமல், அரசியலைப் பற்றி தெரியாத, செய்தித்தாள் படிக்காதவர்கள் கூட அமைச்சர்கள் ஆகிவிடலாம் என்றால், அப்படிப்பட்ட ஜனநாயகம் தேவைதானா?

சமீபத்தில் யேல் பல்கலைக்கழகம், தகுதியற்றவர்களை எல்லாம் பெரும்பான்மையோடு ஆதரித்துவிட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக, ஜனநாயகக் காவலர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தை ஒரு ஆய்வரங்கத்தில் வெளியிட்டது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

தகுதியானவர்கள் தேர்தலில் நிற்பதற்கே இன்றைய சூழ்நிலையில் யோசிக்கின்றார்கள். நமக்கென்ன வந்தது, நம்மால் முடிந்த பணிகளை செய்துவிட்டு போவோம் என்று நல்லவர்கள் எல்லாம் நினைக்கத் தொடங்கி விட்டனர். பிறகெப்படி ஆரோக்கியமான மக்கள் நல அரசியல் நிலைத்து நிற்கும்.
ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு “Elections for Sale, Edited by, Fredrice Charles Scaffer” நூலில் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தது.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories