காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 15): மதரீதியில் நாட்டைப் பிரித்தும் முஸ்லிம்களுக்கு இங்கென்ன வேலை?!

jinnah gandhi - 2026

காந்தி மீதும் அவர் பேச்சை மறுதலிக்காமல் தலையாட்டிக் கொண்டிருந்த தலைவர்கள் மீதும் மானம் இழந்து, அல்லல்பட்டு நாடு திரும்பியவர்களுக்குக் கடும் கோபம் உண்டானது.

டெல்லி நகர வீதிகளிலே உணவிற்காகவும் இருப்பிடத்திற்காகவும் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தவர்களுக்கு கண் முன்னே கண்ட காட்சிகள் கொதிப்படையச் செய்தன.

அந்த பண்டைய நகரத்தில், தேசத்தின் பெருமை மிகு தலைநகரத்தில் ஏதோ இந்த நாடு தங்களுக்கே உரிமையானது போல ஏராளமான முஸ்லீம்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

indo pak partition people - 2026

அரசாங்கத்திலே செல்வாக்கு பெற்ற முஸ்லீம்கள், தொழிலிலே, வணிகத்திலே கொடி கட்டிப் பறந்த கொண்டிருந்த முஸ்லீம்கள்… நகரத்தின் மையப்பகுதியிலே முஸ்லீம்களுக்கென பிரத்யேகமாக எல்லா வசதிகளும் நிறைந்த காலனிகள்..

இந்தக் காட்சிகள் குருதியைக் கொப்பளிக்கச் செய்தது.

போதாக்குறைக்கு.. காந்தியோ…. அகதிகள் முகாமிற்கு வருகை தந்தார்…

எதற்காக? முஸ்லீம்களின் நலன்களை பாதுகாக்க…

அகதிகளால் முஸ்லீம்களுக்கு எந்த பிரச்னைகளும் வந்து விடக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக… முஸ்லீம்கள் ஆங்காங்கே அவர்கள் தங்கி இருந்த பகுதிகளிலேயே இருக்க வேண்டும்… எங்கும் போய் விடக் கூடாது என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

ஹிந்துக்களிடமும், சீக்கியர்களிடமும் ஆயுதங்கள் இருந்தால் உடனே அவர்களிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்று நேருவிடமும், பட்டேலிடமும் காந்தி வலியுறுத்தினார்.

முஸ்லீம்கள் எவ்வித பயமுமின்றி வாழ வகை செய்ய வேண்டும் என்று கூறினார். காந்தியின் இந்த செயல்களையெல்லாம் கண்ட அகதிகள் முகம் சுளித்தனர். காந்தியின் இந்த செயல்களெல்லாம் அவர்களுக்கு வக்கிரத்தனமாகத் தோன்றியது.!

முதுகெலும்பில்லாத தங்கள் தலைவர்களைக் கண்டு மனம் வெதும்பினர். பாகிஸ்தான் தங்களை இப்படி நடத்தவில்லையே ?

இவர்கள் மட்டும் ஏன் இப்படி..?! கட்டுக்கடங்கா கடும் கோபத்துடன் முஸ்லீம்கள் மீது பாய்ந்தார்கள்… பாரதத்தில் வாழ் முஸ்லீம்கள், வேறு முஸ்லீம்கள் எனும் பாகு பாடெல்லாம் அவர்களுக்குத் தோன்றவில்லை.

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.. எனும் எண்ணமே மேலோங்கியது… அவர்கள் கண்களுக்கு எல்லா முஸ்லீம்களுமே எதிரிகளாகத் தோன்றினார்கள்..!

நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்த பின்பு இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்பதாக எண்ணினார்கள். டெல்லி வாழ் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக திரும்பிய தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

முஸ்லீம்களுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினார்கள். பல்வேறு குழுக்களாக தங்களை பிரித்துக் கொண்டு, என்னவெல்லாம் ஆயுதங்கள் தங்கள் கைகளுக்கு கிடைத்ததோ, அவற்றையெல்லாம் திரட்டிக் கொண்டு முஸ்லீம்களை அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டி அடித்தார்கள்.

டெல்லியிலிருந்த அனைத்து முஸ்லீம்களின் மசூதிகள் மற்றும் வழிபாடு இடங்களையும் கைப்பற்றினார்கள். வந்து கொண்டிருந்த குளிர்காலத்தை எதிர்கொள்ள தங்களுக்குத் தேவைப்பட்ட வசிப்பிடங்களை அவர்களே தேடிக் கொண்டார்கள்.

( தொடரும் )

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories