காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 44): எண்ணங்களின் வேற்றுமைகள்!

savarkar vd 1 - 2026

இப்போது காங்கிரஸ் தலைவர்கள் சாவர்க்கரை துரோகியாகப் பார்த்தார்கள். தாங்கள் ‘வெள்ளையனே வெளியேறு‘ இயக்கத்தை நடத்தும் இந் நேரத்தில், சாவர்க்கர் தன் ஆதரவாளர்களை, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரும்படி கூறுகிறாரே, என கோபப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், அவரை எதிரியாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

தன் எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கும் குணமுடையவர் சாவர்க்கர் என்பதால்,அவருடைய முன் யோசனையில்லாத பேச்சுக்களால் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் அவருக்கு எதிரிகள் ஆயினர்.

எதிர்காலத்தில் இதை வைத்தே, தன்னை வழக்குகளில் சிக்க வைப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதையெல்லாம் மனதில் வைத்து கறுவிக் கொண்டே, நேரு போன்றோர் அவரை காந்தி கொலை வழக்கில் சிக்க வைத்தனர்.

சாவர்க்கரை பொறுத்த வரை, பாரதத்திற்கு சுதந்திரம் கிடைக்கக் கூடிய காலம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்திருந்தார். இரண்டாம் உலகப் போரால், பிரிட்டிஷ் அரசாங்கம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஏற்கெனவே,அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்கிலின் ரூஸ்வெல்ட் இந்தியாவிற்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று வெளிப்படையாக வற்புறுத்தி வந்த நிலையில்,உலக நாடுகளின் அழுத்தம் இங்கிலாந்து மீது அதிகமாகி வருவதை உணர்ந்தார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

ஆகவே,’ வெள்ளையனே வெளியேறு ‘ இயக்கம் இல்லாமலே,வெள்ளையர்கள் வெளியேறக் கூடிய காலம் நெருங்கி விட்டதை அவர் கணித்து உணர்ந்தார்.

இதுவே அவருடைய நிலைப்பாட்டிற்குக் காரணம். சாவர்க்கர் இப்போது தன் கட்சியான ‘ ஹிந்து மகாசபா’ வை வளர்ப்பதில் கவனம் செலுத்தத் துவங்கினார்.

அது ஒரு தேசிய இயக்கமாக,முஸ்லீம் லீகிற்கும்,காங்கிரஸுக்கும் போட்டியாக உருவாக வேண்டும் என்று சாவர்க்கர் விரும்பினார்.

ஆனாலுல் அதன் வளர்ச்சி மராத்தி மொழி பேசப்படும் பகுதிகளில் அதிகமிருந்தது என்றே கூற வேண்டும். குறிப்பாக, பூனா மற்றும் நாக்பூரில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

ஹைதரபாத் சிறையிலிருந்து விடுதலையான பிறகு,நாதுராம் கோட்ஸே பூனா திரும்பி, ’ஹிந்து மகா சபா’ கட்சி அலுவலகத்தில் தன் பணியை தொடர்ந்தார்.

1941 ஆம் வருடம்… ஒரு துறுதுறுப்பான இளைஞன் கட்சியின் பூனா அலுவலகத்திற்கு வந்தான். பூனாவிலிருந்து 70 மைல் தூரத்தில் அமைந்திருந்த அஹமத்நகரில்,கட்சி பணியாற்றி வந்தவன் அந்த இளைஞன்.

அவன் பெயர் நாராயண் தத்தாத்ரேய ஆப்தே.

அடுத்த இரண்டு வருடங்களில் ,கோட்ஸேயும்,ஆப்தேயும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். அப்போது கோட்ஸேக்கு வயது 31.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

கோட்ஸே எளிமையானவர்.கண்டிப்பான நடவடிக்கைகள் கொண்டவர்.சீரியஸான நபர். பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர். பெண்கள் இருக்கும் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டார். பெண்கள் கூட்டம் இருந்தால் மெல்ல நழுவி விடுவார்.

வாழ்க்கையின் ஆசாபாசங்களிலிருந்து முற்றிலுமாகத் தன்னை விடுவித்துக் கொண்டவர். சிறு ஒழுக்க நெறித் தவறுதலும் கூட அவரை கோபம் கொள்ளச் செய்யும்.

தன் எண்ணங்களை உயர்ந்த நிலையிலேயே வைத்துக் கொள்ள பழகியவர். அவருக்கு பிடித்தது ஏற்கெனவே கூறியப்படி நாட்டிற்கு உழைத்தல், புத்தகங்கள் படிப்பது, மேடையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசுவது.

அவருடைய பலவீனம், அதிகமாக காபி சாப்பிடுவது. ஆனால் நாராயண் ஆப்தே, கோட்ஸேயிடமிருந்து முற்றிலும் மாறுப்பட்ட குணங்களை உடையவர்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories