காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 56): ஜின்னாவின் துப்பாக்கி

mohammad ali jinnah - 2026

ஜின்னாவின் முஸ்லீம் லீக் வெறியர்கள், குறிப்பாக கல்கத்தாவில் நடத்திக் காட்டிய ‘ நேரடி நடவடிக்கை, தேசத்தின் சரித்திரத்தில் ஒரு கருப்புப் பக்கம். பாரதத் தாயின் மேனியிலே விழுந்து விட்ட ஆறாத் தழும்பு …

வெறி பிடித்தவர்கள் போல இங்கும் அங்குமாக அலைந்தார்கள் முஸ்லீம் வன்முறையாளர்கள். கல்கத்தா நகரெங்கும்…வங்கத்தின் பிற நகரங்கள்.. கிராமம் கிராமமாக… எங்கெல்லாம் அவர்கள் பெரும்பான்மையில் இருந்தார்களோ அங்கெல்லாம்…

’நவ்காளி ‘ என்று ஒரு மாவட்டம்… அந்த மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமாகச் சென்று வீடுகளுக்கு தீ வைத்தார்கள்… ஆண்களை கொன்று குவித்தார்கள்… ஆட்டு மந்தை போல் பெண்களைத் தூக்கிச் சென்றார்கள்.. ‘ நவ்காளி ‘யில் ஒரு இனப்படுகொலையே நடந்தேறியது…

இந்திய பத்திரிகைகள் யார் யாரைக் கொலை செய்கிறார்கள் என்று குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்தன….

இந்த கல்கத்தா கலவரங்கள் பற்றி குறிப்பாக ‘நவ்காளி கலவரங்கள்‘ குறித்து வாசகர்கள் சற்றே விரிவாகத் தெரிந்து கொள்வது நல்லது!

‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு‘ புத்தகத்தில், அதன் ஆசிரியர் ஹொ.வெ.சேஷாத்ரி எழுதியுள்ளதை பார்க்கலாம். (TRAGIC STORY OF PARTITION by H.V.SESHADRI).

(அமரர்) திரு.ஹெச்.வி.சேஷாத்திரி அவர்களை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்…

பழகுவதற்கு மென்மையானவர்.. அவர் எழுத்துக்களில் ஆவேசமோ,ஆக்ரோஷமோ இருக்காது.ஆதாரங்களும்,மேற்கோள்களும், புள்ளி விவரங்களும் இருக்கும்… அது அவரது பாணி…

அவரது வார்த்தைகளில்…. ஆகஸ்ட் 16ஐ ‘ நேரடி நடவடிக்கை தின ‘ மாக அனுஷ்டிக்க அறைகூவல் விடுத்தது முஸ்லீம் லீக்.

‘’ சுதந்திரமான முழு இறையான்மை கொண்ட பாகிஸ்தான் அமைக்கப்படுவதற்கு குறைவான எதிலும் திருப்தி அடைய மாட்டார்கள் இந்திய முஸ்லீம்கள்.

இஸ்லாமிய தேசம் நேரடி நடவடிக்கையில் இறங்குவதற்கான நேரம் வந்து விட்டது ‘’.

தீர்மானம் நிறைவேறிய பின்னர் பேசிய ஜின்னா அறிவித்தார் :‘’ நாம் சரித்திரச் சிறப்பு மிக்க முடிவெடுத்திருக்கிறோம்.இன்று சட்டத்தின் நடைமுறைகளுக்கு நாம் விடை கொடுத்து விட்டோம்.

இரண்டு தரப்பிலும் நம்மை துப்பாக்கி முனையில் பேரம் பேசச் செய்தார்கள்.ஒரு தரப்பாரிடம் அதிகாரமும்,இயந்திரத் துப்பாக்கியும்,மற்ற் தரப்பின் கையில் ஒத்துழையாமை,சட்ட மறுப்பு நடத்துவோம் என்ற மிரட்டல்.இந்த சவாலை சந்திக்க வேண்டும். நம்மிடமும் துப்பாக்கி உள்ளது.’’

ஜின்னா தனது துப்பாக்கியை தூக்கிய விதம் இதுதான். ஆகஸ்ட் 16 நெருங்க நெருங்க கூட்டங்கள், ஊர்வலங்கள்…

ஹிந்துக்களுக்கு எதிராக ’ஜிஹாத்‘ நடத்தும்படி அழைப்பு, அரசாங்க விதிமுறைக்கு எதிரான எழுச்சி எல்லாவற்றையும், எல்லா சிறிய பெரிய நகரங்களிலும் கட்டவிழ்த்து விட்டது லீக். வங்காளம் மற்றும் சிந்துவிலும் இருந்த முஸ்லீம் லீக் அரசுகள் ஆகஸ்ட்16 ஐ விடுமுறை தினமாக அறிவித்தன.

வங்காள முதல்வராக இருந்த ஹெச்.எஸ்.சுஹ்ரவர்த்தி ( H.S.SUHARWARDY ) மத்தியில் அதிகாரம் காங்கிரஸ் கைக்கு மாற்றப்பட்டால்,வங்காளத்தை தனி நாடாகப் பிரகடனம் செய்யப் போவதாக மிரட்டினார்

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories