மகர விளக்கு காலம் முழுதும்… போராட்டக் காலம்தான்!

sabarimalai supremecourt - 2026

மறு சீராய்வு மனு குறித்த விவாதம் உச்ச நீதிமன்றத்தில் திறந்த நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க அளவில் ஐயப்ப நம்பிக்கையாளர்களுக்கு சாதகமாகவே உள்ளது. அடுத்த விசாரணை தேதி மண்டல காலம் கடந்தே என்பதே பல நடைமுறை சிரமங்களுக்கு, நம்பிக்கையாளர்களுக்கு மன நிம்மதி இல்லாதாவதற்கு இடம் கொடுப்பதாக உள்ளது.

மறு சீராய்வு மனு உச்ச நீதி மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே பாதி வெற்றிதான். ஏற்கனவே கொடுத்த தீர்ப்பு பல விஷயங்களை கருத்தில் கொள்ளவில்ல மேலும் விசாரணை தேவை என்பதையே உணர்த்துகிறது

மறு சீராய்வு மனு விசாரணையில்.உள்ளதால் கேரள அரசு நேர்மையான, மக்களுக்கு மதிப்பளிக்கும் அரசாக இருந்தால் சபரிமலை விஷயத்தில் அடம் பிடித்து ப்ரச்னை செய்யாது உச்ச நீதி மன்ற மறு தீர்ப்பிற்கு காத்திருக்கலாம்.

அனைத்து வயது பெண்கள் போக சட்டப்படி தடை இல்லை. ஆனால் இளம் பெண்களை அங்கு. கேரள அரசு கொண்டு போக வேண்டும் என்ற உத்தரவும் அரசுக்கு இல்லையே. பின் ஏன் அரசுக்கு அவசரம் ?

தற்போது அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு உச்ச நீதி மன்ற ஸ்டே இல்லை. முந்தைய தீர்ப்பிற்கும் ஆர்டருக்கும் ஸ்டே இல்லை என கோர்ட் இன்று கூறியுள்ளது.

உண்மையில் முந்தைய உச்ச நீதி மன்ற தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு உள்ளதே தவிர, கேரள அரசிற்கு ஆர்டர், டைரக்‌ஷன் எதுவும் இல்லை.

இளம் பெண்களை அங்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்திரவாதம் எடுத்து அதை கேரள அரசு செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்டர் கேரள அரசுக்கு கோர்ட் கொடுக்கவே இல்லை. அவ்வாறு இருக்க , பல நீதி மன்ற தீர்ப்புகளை கிடப்பில்.போட்ட, போட்டிருக்கும்.கேரள கம்யூனிஸ்ட் பிணராய் அரசு சபரிமலை.விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டும் அவசியம் என்ன?

லட்சக்கணக்கில் கேரள அரசு செலவு செய்து. இளம் பெண்கள் சபரிமலை வரவைக்க விளம்பரத்திற்கு செலவு செய்வதோடு வேறு மறைமுக சலுகைகளாகவும் கொடுத்து பெண்களை சபரிமலை கொண்டு செல்ல பல விதங்களில் கேவலமாக கம்யூனிச அரசு முயன்று செயல்படுகிறது.

இனியாவது, இந்த மண்டல காலத்தில், கேரள கம்யூனிஸ்ட் அரசு, உச்ச நீதி மன்றத்தில் உள்ள மறு சீராய்வு மனுவின் விசாரணை முடிந்து மறு தீர்ப்பு வரும்வரை இந்த விஷயத்தில் பக்தர்களின், நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, சபரிமலை நம்பிக்கை தகர்க்க வேண்டும் என்ற நோக்கம் மாற்றி செயல்பட வேண்டும்.

இந்த மண்டல காலமும்., அதற்குபின்பும், ஐயப்ப நம்பிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் வரை சபரிமலை நம்பிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை யல்லாதவர் களுக்குமான போராட்ட களமாகவும், அவ்வாறு களத்தில்.உள்ளோருக்கும், உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்த இந்து உணர்வாளர்களுக்கும் உணர்வு மிகு வினாடிகள் கொண்ட காலங்களுமாகவே இருக்கும்.

ஐயப்பன். நடத்தும் இந்த சோதனை , பரீட்சை காலம் இந்துக்கள் ஒற்றுமையுடன் , நம்பிக்கையுடன் போராடி அவனருளால் தர்ம ஜயமாக சுபமாக வெல்வோம்.

சரணம் ஐயப்பா ..

– அனு சந்திரமௌலி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories