காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 84): அபாய அறிவிப்பான சாது வேடம்!

savarkar Godse - 2026

சாதுவான கோபால் கோட்ஸேயும்…..கொலை செய்வதற்கு தயாராகி விட்ட கோபால் கோட்ஸேயும்….. இது ஆங்கில நாவல்களில் வரும் JEKYLL and HYDE ஆளுமையை நினைவுப்படுத்தியது.

அவர் நல்லவரா…கெட்டவரா… அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மனிதர்,தன் இரு பெண் குழந்தைகளை விட்டு விட்டு….இளம் மனைவியை விட்டு விட்டு…இப்படியொரு துணிகரமானச் செயலில் இறங்கியது எதனால் உந்தப்பட்டு….?

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந் தேதி,7 நாள் விடுப்பு வேண்டி,அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார் கோபால் கோட்ஸே. விடுப்பிற்காகக் கூறப்பட்ட காரணம் … ‘ கிராமத்தில் அவசரமாக கவனிக்க வேண்டியிருந்த விவசாயப் பணிகளுக்காக’.

விடுப்பு மறுக்கப்பட்டது. மீண்டும் ஒரு விண்ணப்பம்… இம்முறை 17ந் தேதியிலிருந்து விடுப்பு வேண்டி… விடுப்பு அனுமதிக்கப்பட்டது.

செய்ய எண்ணியிருந்த காரியத்தின் காரணமாக என்ன நடக்குமோ என்று தெரியாத நிலை….ஆனாலும் விடுப்பிற்கான விண்ணப்பம்….!! விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின் தான் தன்னுடைய ‘ லட்சிய ‘ பணியை துவங்கினார் கோபால் கோட்ஸே !!

ஆக,ரிவால்வர் கோபால் கோட்ஸே மூலம் கிடைக்கும் என்பது உறுதியானது.

இப்போது தேவைப்பட்டது வெடிகுண்டுகள்.. ஏற்கெனவே திகம்பர் பாட்கே, மதன்லால் பஹ்வா மற்றும் கார்கரேயிடம் காட்டியிருந்த வெடிகுண்டுகள் மற்றும் இத்தியாதிகளை வாங்கிக் கொள்வது என்று இரண்டு தலைவர்களும் ( நாதுராம் மற்றும் ஆப்தே ) முடிவு  செய்தனர்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஆப்தே திகம்பர் பாட்கேவிற்கு தகவல் அனுப்பினார். இது நடந்தது 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 13 ந் தேதி மாலை. வெளியூர் சென்றிருந்த பாட்கே சில மணி நேரத்திற்கு முன்புதான் ஊர் திரும்பி இருந்தார்.

ஆனாலும் ஆப்தேயிடமிருந்து அழைப்பு வரவும் உடனே அவரைக் காண புறப்பட்டுச் சென்றார். மதன்லால் பஹ்வாவிடம் பாட்கே காட்டியிருந்த அனைத்து வெடிகுண்டுகள் மற்றும் இதர வெடிப்பொருட்களையும் வாங்கிக் கொள்வதாகவும்,ஆனால் அவற்றை பாட்கே பம்பாயில் ‘டெலிவரி ‘ கொடுக்க வேண்டும் என்றும் ,அதற்கான பணம் பொருட்கள் கைக்கு வந்த பிறகு கொடுக்கப்படும் என்றும் ஆப்தே பாட்கேயிடம் கூறினார்.

வெடிப்பொருட்களோடு கையும் களவுமாகக் பிடிபடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாட்டைச் செய்தார் ஆப்தே. ஒரு வேளை அந்த நேரத்தில் பாட்கேயிற்கு கொடுக்கப் பணம் இல்லாதிருந்திருக்கலாம்… பம்பாயில் வசூல் செய்து கொடுத்து விடலாம் என்றும் எண்ணியிருக்கலாம்.!

திகம்பர் பாட்கே,பொருட்களை பம்பாயில் கொடுத்து விட்டு அதற்குப் பிறகு பணம் வாங்கிக் கொள்ளுவதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால்,தனக்கும் தன் வேலையாள் சங்கர் கிஷ்டய்யாவிற்குமான பயணச் செலவை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு ஆப்தே ஒப்புக் கொண்டார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

அடுத்த நாள்,அதாவது ஜனவரி மாதம் 14ந் தேதி மாலையில் பம்பாய் ஹிந்து மஹா சபா அலுவலகத்தில் அனைவரும் சந்திப்பது என்று முடிவானது.

டெக்கன் எக்ஸ்பிரஸ் ரெயில் பூனா ரயில் நிலையத்திலிருந்து மாலை 3.30 க்கு புறப்பட்டு நான்கு மணி நேரம் கழித்து பம்பாய் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தை அடையும்.

ஜனவரி 14ந் தேதியன்று,திகம்பர் பாட்கே,தன்னுடைய வேலையாள் சங்கர் கிஷ்டய்யாவுடன் மூன்றாம் வகுப்பு பெட்டிக்குள் ஏறினார். சங்கர் கிஷ்டய்யா ,காகி துணியிலான ஒரு தோள் பையில் 5 கையெறி குண்டுகள்,இரண்டு COTTON SLABS 6 DETONATORS மற்றும் ஒரு COIL BLACK FUSE ஆகியவற்றை எடுத்துக் கொண்டார்.

இவைதான் ஆப்தேயிடமும்,நாதுராம் கோட்ஸேயிடமும் திகம்பர் பாட்கே பம்பாயில் சேர்ப்பதாக ஒப்புக் கொண்ட வெடிப்பொருட்கள்.

போலீஸ் தன்னுடைய செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக அறிந்திருந்த திகம்பர் பாட்கே கூடுதல் எச்சரிக்கையாக இருந்தார். ஒரு வேளை போலீஸ் தேடுதல் ஏதேனும் நடந்தால்,சங்கர் கிஷ்டய்யாதான் வெடி பொருட்களோடு மாட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

பாட்கேவிற்கு தான் மாறுவேடத்தில் இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது. பல வாரங்களாக தாடி வளர்ந்து வந்த அவர்,காவி வேட்டியும், முட்டியை தொடும் அளவிற்கான காவி அங்கியும் அணிந்து கொண்டார்.

கழுத்தைச் சுற்றி காய்ந்த பெர்ரி மாலைகள், நெற்றி நிறைய விபூதி போன்று மர நிறத்திலான பொடியை தடவி இருந்தார்.

இப்போது அவர் ஒரு ‘ சாது ‘ வாம், புனிதமானவராம். எந்த சாதுவும் இது போன்றதொரு படோடோபமான ஆடை அலங்காரம் செய்து கொள்வதில்லை. அந்த மூன்றாம் வகுப்பு ரெயில் பெட்டியில் அவர் ஒரு அபாய அறிவிப்பாகத்தான் காட்சி தந்தார்.

தன்னுடைய இந்த வேடம் தன்னை இன்னும் சந்தேகத்திற்கு உள்ளாக்கும் என்பதை உணராதிருந்தார் பாட்கே.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories