December 5, 2025, 6:52 PM
26.7 C
Chennai

தலையணை மந்திரத்தின் தவப் பயன்..!

ancient veda period guru sishya - 2025

மகள் மருமகளாகும்போது, மகன் மருமகனாகும்போது, மருதாயார், மருதந்தைன்னும் உறவு சொல்லி அழைக்கலாமோ? வார்த்தையிலும் வாழ்க்கை யிலும்!’ என நண்பர்களுடனான ஓர் அரட்டையில் பேசிக் கொண்டிருந்தேன்.

உடனிருந்த வைதீக அன்பர் சொன்னார், “நீர் சொல்வது பளிச்சென்று படுகிறது. அந்தக் காலத்துல மருமகள்கள்தான், மாமியார் மாமனாரை ‘அம்மா, அப்பா’ என அழைத்துக் கொண்டிருந்தார்கள்; இப்போதெல்லாம், சொந்த அம்மா அப்பாவை ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’ என்ற அடைமொழியோடு, விருத்தாச்ரமத்தில் (காப்பகங்களில்) விட்டு விட்டு, மாமியார்,மாமனாரை ‘அம்மா, அப்பா’ என்று அழைக்குமளவு நாகரீக வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் மாப்பிள்ளைகளான இப்போதைய இளைஞர்கள்” என்று தடாலடியாகவே ஒரு போடு போட்டார்.

ஓ! இதுதான் உண்மையோ என்ற மயக்கம் ஏற்பட்டபோது, இன்னொரு நண்பர் சொன்னார், “பெற்றோரிடம் இருந்து பெற வேண்டியவற்றைப் பெற்ற பின், அவர்களை மறந்துவிடுவது இயல்பாகியுள்ளது! உண்மைதான். ஆனால், இது முழுவதும் மனைவியின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டதால் வந்த எண்ணம்; டிவி தொடர்களால் வக்கிரமாகிப் போயுள்ள சிந்தனை” என்றார்.

பரவாயில்லையே! ‘தலையணை மந்திரம்’ என்ற சொல், மூளைச்சலவை என்றபடி நவீன சொல்லாக்கத்தில் வந்து நிற்கிறதே என எண்ணிக் கொண்டேன்.

அப்போது இன்னொருவர் சொன்னார், “அப்படி அல்ல! வயதானவர்களும் முதலில் காலத்துக்குத் தக்க நடந்துகொள்ள வேண்டும். தம் மகன் பேரிலான அக்கறையைவிட, டிவி தொடர்களைப் பார்த்து, சுயநலனுடன், சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் ஒருவித மயக்கத்தில் இருக்கிறார்கள்” என்றார்.

எனக்கு யாரையும் குற்றம் சொல்ல மனமில்லை! ஆனால், இன்றைய சமூக நடப்புகள் மனத்தைக் குடைந்தெடுப்பது மட்டும் உண்மை! எல்லாவற்றுக்கும் காரணம், பொழுதை சரியானபடி போக்காமல், நம் மனத்தை கொந்தளிப்புக்கு உள்ளாக்கும் நிகழ்வுகளிலும் கதைகளிலும் தொடர்களிலும் செலுத்தி நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

சில காலம் முன்பு வரை சென்ற தலைமுறையினர் நன்றாகப் பொழுதை பயனுள்ள வகையில் போக்கி வந்தார்கள். அவர்களின் அறிவுரைகள் நம்மை வளர்த் தெடுத்தன. ஆனால் இன்று…? சொல்ல நா எழவில்லை!

‘தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது’

– என்று நான்முகன் திருவந்தாதியில் திருமழிசையாழ்வார் அருளிச் செய்து நமக்கு வழிகாட்டுகிறார்.

எப்படிப் பொழுது போக்கினேன்…? நட்சத்திரங்களின் சஞ்சாரத்தை விரித்து உரைத்த ஆதிசேஷனின் அந்தராத்மாவாகிய உன்னை, பெருமானே உன்புகழை உணர்ந்து எழுதியும் வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசனை செய்தும் காலம் கழிக்கின்றேன் என்றார்!

இன்றைய பெரியோர்க்கு அடியேன் விடுக்கும் வேண்டுகோளும் இதுவே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories