காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 117

gandhiji manuben - 2026

அந்த சிமெண்ட் ஜாலியை பார்த்த கோபால் கோட்ஸே, அது சுவரிலே சற்றே உயரமான இடத்தில் அமைக்கப் பட்டிருந்ததைக் கண்டார்.

ஆக நேரிடையாக காந்தி இருக்கும் இடத்தை பார்க்க சாத்தியமில்லை என்பதை உணர்ந்த கோபால் கோட்ஸே எம்பி அந்த ஜாலியின் ஒரு விளிம்பை பிடித்தவாறு மேலே எழும்பி ஜாலியின் வழியாக பார்க்க முயன்றார்.

ஆனால் அந்த நிலையில் தொடர்ந்து இருக்க அவர் தன் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது.

சில வினாடிகளுக்கு,ஒரு கையில் ஜாலியின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் ரிவால்வரை எடுத்துக் கொண்டார்.

ஆனால் அந்த நிலையில் அவரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை.

ஆக,அந்த ஜாலியின் வழியாக காந்தியை சுடுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த கோபால் கோட்ஸே அங்கிருந்து தப்பிச் சென்று விடலாமென்று எண்ணி,

கதவருகே திரும்பி வந்து,உள்புறமாக பூட்ட பயன்படுத்தி இருந்த சங்கிலியை இழுத்தார்.

ஆனால் அதை இழுக்க முடியாததை உணர்ந்த போது,அச்சத்தில் உடல் உறைந்து போகத் தொடங்கியது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

சில விநாடிகளுக்கு சங்கிலியை விடுவிக்க முயன்றும் முடியாததால்,ஆஹா உள்ளே வகையாக மாட்டிக்கொண்டு விட்டோம் என்றெண்ணி சற்றே கலங்கிப்போனார்.

தன் பையை கீழே போட்டுவிட்டு இரு கைகளையும் பயன்படுத்தி அந்த கொக்கியிலிருந்து சங்கிலியை விடுவிக்க பலம் கொண்டமட்டும்,இழுத்தார்.

கதவு சத்தத்துடன் திறந்துக் கொண்டது.

வெளியே காத்திருந்த டாக்ஸியை நோக்கி வேகவேகமாக ஓடினார்.

அங்கே நாதுராம்,ஆப்தே,கார்கரே ஆகியோர் ஏற்கெனவே வந்து விட்டிருந்தனர்.

டாக்ஸி டிரைவரும் இருந்தார்.

காருக்குள் வேகவேகமாக ஏறியவர்கள் ,

‘’ காரை START செய் காரை START செய் ‘’ என்று அவசர அவசரமாகக் கூறியதாக பின்னாளில் தன் வாக்குமூலத்தில் அந்த டாக்ஸி டிரைவர் சுர்ஜித் சிங் கூறினார்.

அவர்களை டிரைவர் CONNAUGHT PLACE பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

நம்பமுடியாதபடி,சோட்டு ராமின் அறை,மைதானத்திலிருந்து கீழ்நிலையில் இருந்தது.

வெளியே இருந்து அந்த சிமெண்ட் ஜாலியை அளந்த ஆப்தே சற்றும் சிரமப்படாமல் ஜாலியின் துவாரங்களை அளந்திருந்தார்.

அதனால் உள்ளே இருந்த பிரச்சனையை அவர் எதிர்பார்க்கவில்லை.

அறையின் உள்ளேயிருந்து பார்த்தபோது அந்த ஜாலி ஏழு அடிக்கு சற்றே மேலே அமைந்திருந்தது.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

கோபால் கோட்ஸேயாலேயே அந்த ஜாலியின் வழியாக சுடுவது சாத்தியப்படவில்லையென்றால்,நிச்சயம் திகம்பர் பாட்கேவிற்கு அது சாத்தியப்பட்டிருக்காது.

காரணம் கோபால் கோட்ஸே சற்றே உயரமானவர் 5 அடி எட்டு அங்குலம்.திகம்பர் பாட்கே 5 அடிக்கும் சற்றே குறைவானவர்.

காரிலே மராத்தியில் தன் நண்பர்களுடன் பேசியே கார்கரே,மதன்லால் பஹ்வாவை,போலீசாரார் பிர்லா கேட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த டெண்டிற்கு அழைத்து செல்வதைப் பார்த்ததாகவும்,

அவர்கள் அவனுடன் இருப்பதாகவும் அதனால் அதைரியப்பட வேண்டாம் என்று கண்களால் ஜாடை செய்ததாகவும் கூறினார்.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories