மோடியின் ‘ஏழைகளுக்கான தேர்தல் அரசியல்’ கனவை நிறைவேற்றுவாரா… பியூஷ் கோயல்?

Piyush Goyal modi - 2026

அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளும் அறிவிப்புகளும் தாராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால், அருண் ஜேட்லி இல்லாமல், நல்ல முறையில் கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக தயாரித்தளிக்க மோடி விரும்பியிருக்கக் கூடும் என்றும், அதற்கு சரியான நபராக பியூஷ் கோயலை மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2014ல் மோடி பிரதமர் ஆன பின்னர், நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென உயர்ந்தது. வலிமையான ஆட்சி, உறுதியான முடிவுகள், ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படையான பரிவர்த்தனைகள் என மோடி உருவாக்கிய நம்பிக்கையால் பங்குச் சந்தைகள் தொடங்கி, வர்த்தகம் உச்சத்தை எட்டியது. ஆனால், தொழில்துறையில் சில தேக்கங்கள் ஏற்பட்டன. அதற்கு நிதி அமைச்சகத்தின் சில நடவடிக்கைகள் காரணமாகப் பார்க்கப் பட்டன.

வங்கித் துறையில் ஏற்பட்ட இழப்பு, கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு ஓடிச் சென்றவர்களால் வராக் கடன் அதிகரிப்பு என பல அம்சங்கள் பின்னோக்கி இழுத்தன. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தராமல், இழுத்தடிப்பதும், ப.சிதம்பரம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு அருண் ஜேட்லி நெருக்கம் என்பதால் அவர்கள் தப்பித்து வந்தார்கள் என்றும் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.

ALSO READ:  திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

அருண்ஜேட்லியால் வரிசெலுத்துவோருக்கான நலன்களை சரியாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை. பொருளாதாரம் உயர்ந்தும், வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்க சரியான திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், பியூஷ் கோயல் நிதி அமைச்சகப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். வழக்கம் போல் பட்ஜெட்டுக்கு முன்னர் அல்வா கிண்டும் வேலையை இந்த முறை பியூஷ் கோயல் மேற்கொள்ளக் கூடும்!

NaMo and Piyush Goyal - 2026

பிரதமர் நரேந்திர மோடியுடன் பலமுறை பயணப் பட்டிருக்கிறார். வெளிநாடு சென்றிருக்கிறார். ஆனால், 51 வயதாகும் பியூஷ் கோயலுக்கு அடித்தட்டு அரசியலும், தேர்தல் அரசியலும் தெரியாது என்ற விமர்சனமும் உள்ளது. மேதைத்தனத்தால் நிர்வாகத்தை சிறந்த முறையில் செய்து வரும் பியூஷ் கோயலுக்கு அடித்தட்டு மக்களின் மனதைப் புரிந்து கொண்டு சலுகைகள் வழங்க வேண்டிய தேர்தல் காலச் சூழலில் தாம் நிதி அமைச்சகப் பொறுப்பில் இருந்து பட்ஜெட்டைத் தயாரிக்கிறோம் என்ற உள்ளுணர்வு இருக்க வேண்டுமே என்று பாஜக.,வினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், மோடியின் ஏழைகளுக்கான அரசியல் என்ற கனவுகளை நிறைவேற்றும் விதமாக பியூஷ் கோயல் தேர்தல் பட்ஜெட்டைத் தயாரிக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ALSO READ:  T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories