December 6, 2025, 5:12 AM
24.9 C
Chennai

ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்: சு.சுவாமி சொன்ன பின்னணி

swami rajini - 2025

சென்னை:

ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்; அவருக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் பேச்சுகள் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர், ”ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவர் தமிழர் இல்லை. கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தைக் கொண்டவர். தற்போது அவரின் அரசியல் பார்வையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பேசி வருகிறார். அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக, திங்கள்கிழமை நேற்று சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவதும் வராததும் ஆண்டவன் கையில் இருக்கிறது என கூறினார்.

ரஜினிகாந்த் பேசியதைக் கேட்டபோது, அவர் அரசியலுக்கு வர தயாராகி விட்டார் என்றே தெரிகிறது என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைமை கருத்து தெரிவித்த சூழலில், பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி ரஜினியின் பேச்சுக்கு தன் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரஜினியின் அரசியல் கருத்துகள் குறித்துப் பார்க்கும் போது, சுப்பிரமணியன் சுவாமி சொன்னதன் பின்னணி நன்கு தெரியவரும். போயஸ் கார்டன் பகுதியில் தான் குடியிருக்கும் வீட்டுப் பகுதியில் தனக்கு ஜெயலலிதாவால் ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணத்தால் அரசியல் பேசினார் ரஜினி. ஜெயலலிதாவை சமாளிக்க திமுக தலைவர் கருணாநிதியின் தயவை நாடினார். ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கருணாநிதி தனக்கு பெரும் உதவி செய்துள்ளதாகவும், செய்நன்றி மறக்காமல், அவர் இருக்கும் வரை தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் கூறினார். பின்னாளில் ஜெயலலிதாவுடன் நட்பு கொண்டாடினார்.

சென்ற பேரவைத் தேர்தல் நேரத்தில் மோடி சென்னை வந்திருந்தபோது, ரஜினியின் வீடு தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போதும் ரஜினி தனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றார். இது போன்ற காரணங்கள் ரஜினியை நம்பகத்தன்மை அற்றவராகவே காட்டுகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அதையே சுப்பிரமணிய சுவாமியும் பிரதிபலித்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories