ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்: சு.சுவாமி சொன்ன பின்னணி

swami rajini - 2026

சென்னை:

ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்; அவருக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் பேச்சுகள் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர், ”ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவர் தமிழர் இல்லை. கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தைக் கொண்டவர். தற்போது அவரின் அரசியல் பார்வையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பேசி வருகிறார். அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக, திங்கள்கிழமை நேற்று சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவதும் வராததும் ஆண்டவன் கையில் இருக்கிறது என கூறினார்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

ரஜினிகாந்த் பேசியதைக் கேட்டபோது, அவர் அரசியலுக்கு வர தயாராகி விட்டார் என்றே தெரிகிறது என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைமை கருத்து தெரிவித்த சூழலில், பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி ரஜினியின் பேச்சுக்கு தன் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரஜினியின் அரசியல் கருத்துகள் குறித்துப் பார்க்கும் போது, சுப்பிரமணியன் சுவாமி சொன்னதன் பின்னணி நன்கு தெரியவரும். போயஸ் கார்டன் பகுதியில் தான் குடியிருக்கும் வீட்டுப் பகுதியில் தனக்கு ஜெயலலிதாவால் ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணத்தால் அரசியல் பேசினார் ரஜினி. ஜெயலலிதாவை சமாளிக்க திமுக தலைவர் கருணாநிதியின் தயவை நாடினார். ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கருணாநிதி தனக்கு பெரும் உதவி செய்துள்ளதாகவும், செய்நன்றி மறக்காமல், அவர் இருக்கும் வரை தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் கூறினார். பின்னாளில் ஜெயலலிதாவுடன் நட்பு கொண்டாடினார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

சென்ற பேரவைத் தேர்தல் நேரத்தில் மோடி சென்னை வந்திருந்தபோது, ரஜினியின் வீடு தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போதும் ரஜினி தனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றார். இது போன்ற காரணங்கள் ரஜினியை நம்பகத்தன்மை அற்றவராகவே காட்டுகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அதையே சுப்பிரமணிய சுவாமியும் பிரதிபலித்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories