ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்: சு.சுவாமி சொன்ன பின்னணி

swami rajini - 2026

சென்னை:

ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்; அவருக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் பேச்சுகள் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர், ”ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவர் தமிழர் இல்லை. கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தைக் கொண்டவர். தற்போது அவரின் அரசியல் பார்வையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பேசி வருகிறார். அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக, திங்கள்கிழமை நேற்று சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவதும் வராததும் ஆண்டவன் கையில் இருக்கிறது என கூறினார்.

ரஜினிகாந்த் பேசியதைக் கேட்டபோது, அவர் அரசியலுக்கு வர தயாராகி விட்டார் என்றே தெரிகிறது என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைமை கருத்து தெரிவித்த சூழலில், பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி ரஜினியின் பேச்சுக்கு தன் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரஜினியின் அரசியல் கருத்துகள் குறித்துப் பார்க்கும் போது, சுப்பிரமணியன் சுவாமி சொன்னதன் பின்னணி நன்கு தெரியவரும். போயஸ் கார்டன் பகுதியில் தான் குடியிருக்கும் வீட்டுப் பகுதியில் தனக்கு ஜெயலலிதாவால் ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணத்தால் அரசியல் பேசினார் ரஜினி. ஜெயலலிதாவை சமாளிக்க திமுக தலைவர் கருணாநிதியின் தயவை நாடினார். ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கருணாநிதி தனக்கு பெரும் உதவி செய்துள்ளதாகவும், செய்நன்றி மறக்காமல், அவர் இருக்கும் வரை தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் கூறினார். பின்னாளில் ஜெயலலிதாவுடன் நட்பு கொண்டாடினார்.

சென்ற பேரவைத் தேர்தல் நேரத்தில் மோடி சென்னை வந்திருந்தபோது, ரஜினியின் வீடு தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போதும் ரஜினி தனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றார். இது போன்ற காரணங்கள் ரஜினியை நம்பகத்தன்மை அற்றவராகவே காட்டுகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அதையே சுப்பிரமணிய சுவாமியும் பிரதிபலித்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories