December 8, 2025, 5:16 PM
28.2 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 130)

gandhi godse - 2025

பின்னாளில் காந்தி கொலை நிகழ்ந்த பிறகு,

பம்பாய் போலீஸாரிடம் டெல்லி போலீஸார் சொன்னது என்ன சொல்லாதது என்ன என்று டெல்லி போலீஸாரும் பம்பாய் போலீஸாரும் பரஸ்பரம் ஒருவர்மீது இன்னொருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இவர்களது சர்ச்சை சந்திசிரித்ததுதான் மிச்சம்.

மதன்லால் பஹ்வாவை விசாரித்ததில் கிடைத்த தகவல்களை சரியான முறையில் போலீசார் பயன்படுத்தாததன் காரணமாக ,காந்தியை கொல்லதிட்டமிட்டவர்களை உரிய நேரத்தில் கைது செய்யாமல்,காந்தி கொலை நடந்தேற போலீசாரே காரணமாகிவிட்டனர்.

குறிப்பாக மதன்லால் பஹ்வா,தன்னுடைய கூட்டாளிகளில் ஒருவராக குறிப்பிட்டவர் ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகையின் ஆசிரியர்.

அவர் யார் என்று போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியாதுபோனது விநோதத்திலும் விநோதமே.

பத்திரிகைச்சட்டத்தின் ( PRESS ACT ) கீழ் ஒவ்வொரு மாகாண அரசும் அதனுடைய ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளின் உரிமையாளர்கள் யார்,ஆசிரியர்கள் யார் என்ற தகவல்களை வைத்திருப்பார்கள்.

ஒரு போலீஸ் அதிகாரியோ,ஏன் ஒரு தனிநபரோகூட டெல்லியிலிருந்து பம்பாயிற்கு தொலைபேசியேலேயே தொடர்புகொண்டு கேட்டிருந்தால்,’ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸே என்பதும்,அவருடைய விலாசம் முதலியனவும் மிகவும் எளிதாகத் தெரிந்திருக்கும்.

இந்த முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லையென்பது விநோதமாகவும் மர்மமாகவும் இருக்கிறது.

இதற்கான பதில் கடைசிவரை கிடைக்கவே இல்லை.

ஒருவேளை இந்த தகவல் பம்பாயின் போலீஸ் துணைக்கண்காணிப்பாளர் நகர்வாலாவிற்கு கொடுக்கப்பட்டிருக்குமேயாயின் அவர் உரியநேரத்தில் நாதுராமை கைதுசெய்து காந்தி கொலை நிகழாமல் தடுத்திருக்கமுடியுமோ என்னவோ ?

குறைந்தபட்சம் நாதுராமை அடையாளம் தெரிந்த பூனா போலீசார் சிலரை பிர்லா ஹவுஸில் பாதுகாப்பிற்கு போட்டிருக்க முடியும்.

டெல்லி போலீசாரின் தவறுகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில்,துணைக்கமிஷனர் நகர்வாலாவும் தன் பங்கிற்கு ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அவரிடம் சொல்லப்பட்ட எந்த தகவல்களையும்,அபிப்பிராயங்களையும்,அனுமானங்களையும் காது கொடுத்து கேட்கவே தயாராக இல்லை.

அவருடைய வாதங்களும் கோட்பாடுகளும் வித்தியாசமாக இருந்தன.

தன்னுடைய சக காவல் அதிகாரி ஒருவரிடம் அவர் ஒரு வித்தியாசமான எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தினார்.

’’ சதிகாரர்கள் காந்தியை ஏதோ ஒரு காரணத்திற்காக கடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.அது மிகப்பெரிய இயக்கம்.அதில் 20 முக்கிய சதிகாரர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.ஒவ்வொருவரின் கீழும் மேலும் 20 பேர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டுகளும் ,துப்பாக்கிகளும்,வேறு அபாயக்கரமான ஆயுதங்களும் இருக்கக்கூடும் ‘’.

இப்படிப்பட்ட அற்புதமான சிந்தனையாளராக,தன்னுடைய கற்பனை உலகத்திலேயே நகர்வாலா இருந்துபோனார்.அதன் காரணமாக டெல்லி போலீசார் கூறிய எதையுமே அவர் ஏற்கவில்லை.

மதன்லால் பஹ்வாவின் வாக்குமூலத்தை படித்தபின்னும்கூட ‘டெல்லி போலீசாரை கடத்தல்காரர்கள் திசைதிருப்பிவிட்டார்கள்’ என்று பிதற்றிக்கொண்டே தன் வழியில் விசாரணையை மேற்கொண்டிருந்தார்.

ஜனவரி மாதம் 30ந் தேதி காந்தி கொலை செய்யப்பட்ட நாள் வரையும்கூட நகர்வாலா தன்னுடைய கடத்தல் ‘ தியரியை ‘ வலியுறுத்தியே டெல்லி போலீசாருக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டு இருந்தார்.

ஜனவரி மாதம் 30ந் தேதி காந்தி கொலை செய்யப்பட்டபிறகே தன்னுடைய ‘ கடத்தல் பிதற்றலை ‘ நகர்வாலா நிறுத்தினார்.கற்பனை உலகிலிருந்து வெளியே வந்தார்.

ஆக,

காந்தி கொலைச்சதியைப்பற்றிய போதுமான தகவல்கள் தெரிந்தபின்னரும்கூட டெல்லி மற்றும் பம்பாய் போலீசார் தங்களிடையேயிருந்த ‘’ நீ பெரியவனா நான் பெரியவனா ‘’ எனும் மனோபாவத்துடனான செயல்பாடுகள் காரணமாக காந்தி கொலை நிகழ்வதற்கு ஒரு விதத்தில் காரணமாகி விட்டனர் .

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

~ எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories