சிதம்பர ‘ரகசியம்’! மோடிக்கு நேற்று ‘ஷொட்டு’! இன்று ‘திட்டு’!

14 June11 P Chidambaram 1 - 2026

காக்கிச் சட்டைகளின் நெருக்குதலில் இருந்து கறுப்பு கவுன்களின் தயவில் தப்பித்துக் கொண்டிருக்கும் கதர்ச்சட்டைக்காரர் காவித் தீவிரவாதம் என்று சொல்லி கிழிந்த சட்டை பாமரனை திசைதிருப்பி தப்பித்து வருவது உலகறிந்த சிதம்பர ரகசியம்!

மத்திய அரசு மீதும், பிரதமர் மோடியின் மீதும் அவதூறுக் கருத்துகளை அள்ளிவிடும் முன்னாள் நிதி அமைச்சர், திடீரென்று நேற்று மோடியின் திறமையைப் பாராட்டினார். அது ஒரு பாராட்டு என்று உணர்ந்ததாலோ என்னவோ, இன்று மீண்டும் தூற்றத் தொடங்கிவிட்டார்.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஆளும் மத்திய அரசின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது என்று மனதார பாராட்டு தெரிவித்தார் ப.சிதம்பரம்.

ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்ஸிஸ், சட்டவிரோத பணபரிமாற்றம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சிதம்பரமும் அவரது மகன் கார்த்தியும் எதிர்கொண்டுள்ளனர். இதனால் மத்திய அரசின் மீது எப்போதும் விமர்சனத்தை மட்டுமே முன்வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் ப.சிதம்பரம் திடீரென நேற்று பாராட்டியது, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய  ப.சிதம்பரம், மோடிக்கும் மத்திய அரசுக்கும் சில பாராட்டுதல்களைச் சொன்னார்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஜிஎஸ்டி.,யும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் தேசிய நெடுஞ்சாலை பணியும் பாராட்டுக்குரியது. நாள் ஒன்றுக்கு நாங்கள் செய்ததை விட பல கி.மீ., சாலை அமைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் நல்ல பாராட்டுதலுக்குரியது. எங்களை விட கூடுதலாக 35 கோடி பேருக்கு வங்கி கணக்கு துவங்கும் ஜன்தன் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டுள்ளது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் 5 முறை முயற்சி செய்தோம்! ஆனால், அவைஅனைத்தும் தோல்வியில் முடிந்தன. இருப்பினும் பாஜக., அரசின் நடவடிக்கை மிக முனைப்புடன் உள்ளது. இதனால் இந்தத் திட்டம் தோல்வி பெறாது என நினைக்கிறேன். இதனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்… என்றார்.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மோடியைத் திட்டித் தீர்க்கும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டோமே என்று நினைத்தவர், இன்று டிவிட்டரில் பதிலுக்கு திட்டித் தீர்த்துவிட்டார் வழக்கம்போல்!

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் தனது டிவிட்டர் பதிவுகளில்!

ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில்,

இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார்

விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?

இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? – என்று கேள்வி எழுபியுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஆக… நேற்று பாராட்டும் இன்று விமர்சனமும் என இரு தரப்பையும் சமாளித்துவிட்டார் சிதம்பரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories