வரி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் மிரட்டல்! ‘ஏழைகளுக்கான’ மோடி அரசு !

modi trump - 2026

வரி விவகாரம்..! மிரட்டும் அமெரிக்கா; அசராத இந்தியா! ஏழைகளின் மோடி அரசு ஆயிற்றே! வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியாக முட்டலும் மோதலும் ஒட்டலும் உரசலும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தகத்தை முன்னிறுத்தி இந்தியாவை மிரட்டிப் பார்க்கிறார். ஆனால் ஓரளவு இயைந்து கொடுத்த மோடி இப்போது முரண்டு பிடிக்கிறார்!

சில நாட்களுக்கு முன் ஒரு பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகபட்ச வரி விதிக்கிறது என்று கோபப் பட்டார்.

1970-களில் பொருளாதாரத்தில் வளர்ந்து  வரும் நாடாக திகழ்ந்து வந்த இந்தியாவை
அமெரிக்கா ஜி.எஸ்.பி. எனப்படும் பொதுவான முன்னுரிமை திட்டத்தின் கீழ் சேர்த்தது. இந்தத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவிடம் வர்த்தக ரீதியில் சலுகை பெற்று அதிக பலன் அடைகிற நாடாக இன்றளவும் இந்தியா விளங்கி வருகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும்  இந்தியாவில் இருந்து அமெரிக்கா 5.7  பில்லியன் டாலர் (சுமார் ரூ.40,470 கோடி) பொருட்களை சுங்க வரி விதிக்காமல்  இறக்குமதி செய்தது. இந்நிலையில், ஜி.எஸ்.பி. திட்டத்தின்  கீழ், இந்தியாவுக்கு வழங்கி வரும் வரிச் சலுகையை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்கா நேற்று 60 நாள் நோட்டீஸ் வழங்கியது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இந்நிலையில், அமெரிக்கா எழுப்பியுள்ள கோரிக்கைகள் குறித்து தீர்வு காண இந்தியா முன்வந்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டார்.

இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தக சலுகை அமெரிக்கா பறித்தாலும் இந்தியாவில் அது குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். ஆயினும், இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தக சலுகையை டிரம்ப் தொடர்ந்து வழங்க வேண்டும் என அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சில் வலியுறுத்துகிறது.

இந்நிலையில், அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகள் நிலை குறித்தும் இதன் பின்னணி குறித்தும் இந்திய பொருளாதார வல்லுநர்கள் கூறுவதன்படி பார்த்தால்…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிச்சலுகை
வழங்காது ! காரணம் என்ன ? இருதய நோய் சிகிச்சையில்  பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட் , மூட்டு  மாற்று உபகரணங்களின் விலையை அரசு  கட்டுப்படுத்தாமல் அமெரிக்க கம்பனிகள்  விலை நிர்ணயம் செய்ய அனுமதிக்க  வேண்டுமாம் !

ஏழைகளுக்குத் தரமான மருத்துவ வசதி  கொடுக்க வேண்டும் என்ற கொள்கையைக்  கொண்ட மோடி அரசு , அமெரிக்க  வற்புறுத்தலுக்கு அடிபணியவில்லை ! கோபத்தில் அமெரிக்கா வரிச்சலுகையை ரத்து செய்யப் போகிறதாம் ! ஏழை எளிய மக்களுக்காக அமெரிக்க  கார்பரேட் சக்திகளை எதிர்த்து போராடும்  மோடி அரசை ஆதரிப்போம் !

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

மோடி அரசை எதிர்ப்பவர்கள் போலிப்  போராளிகள் என்பதைப் புரிந்து கொள்வோம்! என்கின்றனர் பாஜக.,வினர்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories