மோடி பங்கேற்கும் சென்னை மாநாடு: மேடையில் விஜயகாந்த் வாசன் படங்கள்!

nda meeting stage - 2026

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக, பாமக., பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

இந்தப் பொதுக் கூட்டத்துக்காக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் படம் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இன்று நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக., தலைவர் விஜயகாந்த் படமும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் படமும் இடம்பெற்றுள்ளதால், அ.தி.மு.க- தே.மு..தி.க கூட்டணி உறுதியாகிவிட்டதாகக் கூறப்பட்டது.

எந்தக் கூட்டணியிலும் உடனே சேராமல், வழக்கம் போல் கடைசிக் கட்டம் வரை இழுத்துக் கொண்டிருந்த தேமுதிக.,வுக்கு பதிலடியாக திமுக., உடனே கூட்டணியை நிறைவு செய்து இனி கதவுகள் மூடி விட்டன என்று அறிவித்தது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இதனால் தே.மு.தி.க.வுக்கான தி.மு.க. கூட்டணி வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையில் கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும், தேர்தல் பணியாற்றுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாம். ஆனால், கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுக. கூட்டணியில் குறைந்தபட்சம் 7 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக உறுதியாக நிற்கிறது. ஆனால் அதிமுக.,வோ, 4 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்குவதாகக் கூறுகிறது.

இந்நிலையில், விஜயகாந்த் இன்று காலை கட்சி அலுவலகம் வந்து, கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதிகள் குறித்தும், எண்ணிக்கை குறித்தும் பேசப்பட்டது.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் என்றும், அவற்றில் 2 தனித் தொகுதிகள் என்றும் கூறப் பட்டதால், தனித்தொகுதிகளை ஏற்க தேமுதிக தயங்கியது. மேலும், பாமக வலுவாக உள்ள தொகுதிகளை ஏற்பதையும் தேமுதிக., தவிர்த்து வருகிறதாம்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

இந்நிலையில், தங்களுக்கு 4 தொகுதிகள்தான் என்றால் கூட்டணியே வேண்டாம் என்று கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கொடுக்கும் 4 தொகுதிகளை பெறுவதை விட தனித்தே நிற்கலாம் என சில நிர்வாகிகள் கூறினராம்.

நீலகிரி , தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா தொகுதிகளில் ஒன்று என தேமுதிக.,வுக்கு ஒதுக்கீடு செய்யப் பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானதால், தங்களுக்கு இந்தத் தொகுதிகளில் வெற்றிக்கான வாய்ப்பு இல்லை என்று கருதுகிறது தேமுதிக.,!.

எனவே, தனித்துப் போட்டியிடலாம் அல்லது, தினகரன் கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்றும் பேச்சுக்கள் நடந்ததாகக் கூறப் படுகிறது.

இருப்பினும், விஜயகாந்த் படம் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் வரிசையில் மேடையில் இடம்பெற்றுவிட்டது. கூடவே ஜிகே வாசன் படமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories