நரேந்திர மோடி என்கிற மரண வியாபாரி!

Published:

modi laughing - 2026

நரேந்திர மோடி என்கிற மரண வியாபாரி.

சோனியா ஆட்சியில் 2008 இல் மட்டும் நாம் பயங்கரவாதத்துக்கு இழந்த இந்திய உயிர்கள் 488. காஷ்மீர் மட்டுமல்ல, டெல்லி, ஹைதராபாத், பெங்கலூர், மும்பை, சென்னை என இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் விரும்பும் போது தாக்கும் திறன் பயங்கரவாதிகளுக்கு இருந்தது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீர் சத்தீஸ்கர் தாண்டி இந்தியாவின் வேறெந்த பகுதியிலும் ஜிகாதிகளால் தாக்க முடியவில்லை. அவர்களின் நெட்வொர்க்கும் உள் கட்டுமானமும் தகர்ந்திருக்கிறது. பலவீனப்பட்டிருக்கிறது. இது சாதாரணமான விஷயமல்ல.

2014-19 காலகட்டத்தை கவனியுங்கள். உலகமெங்கும் முக்கிய நகரங்களில் அமெரிக்கா தொடங்கி ஐரோப்பாவெங்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு உயிர்பலி வாங்கியிருக்கிறது. அவர்கள் இந்தியாவை விட்டு வைக்கவில்லை.

‘அமைதிப்பூங்கா’ என நாம் நினைக்கும் தென் இந்தியாவிலிருந்து இளைஞர்கள் யுவதிகள் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் இங்கே எந்த ஒரு தாக்குதலும் நடக்கவில்லை.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அஜித் தோவல்-மோடி கூட்டணிதான் இதற்கு காரணம். …

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மற்றொரு விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். அது பதிலடி.

ராணுவ வீரர்களை என்.எஸ்.சி.என் என்கிற பிரிவினை வாத அமைப்பு தாக்கியது. அதன் தளங்கள் முகாம்கள் மியன்மாரில் உள்ளன. முதல் சர்ஜிக்கல் பதிலடி அங்கேதான்.

15 ராணுவவீரர்களை தாக்கியதற்கு அவர்கள் 150 பேர் கொல்லப்பட்டனர். 2016 இல் யூரி தாக்குதலுக்கு இரண்டாவது சர்ஜிக்கல் தாக்குதல். 2019 இல் புலவாமாவுக்கு விமான சர்ஜிக்கல் தாக்குதல்.

பாகிஸ்தான் என்னதான் நாடகமாடினாலும் ஒன்று நிச்சயம் அதற்கு புரிந்திருக்கும். மோடியின் ஆட்சியில் எந்த இந்தியனின் மீது தாக்குதல் நடந்தாலும் அதற்கு பாகிஸ்தான் கடுமையான ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

முதன் முறையாக இந்திய உயிர்களின் மதிப்பை உணர்ந்த மதிக்கிற ஒருவர் பிரதமராகியிருக்கிறார்.

– எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்

Related articles

Recent articles

spot_img