நல்லாத்தான் இருந்தாரு..! மோடி எதிர்ப்புல பைத்தியம் ஆயிட்டாரு..!

India manned space modi - 2026

”20000 கிமீ போய்த் தாக்கும் ராக்கெட்டு எங்காள் அன்னிக்கே விட்டுட்டாரு. வெறும் முன்னூறு கிமீல இருக்கிற ஒரு செயற்கைக்கோளை அடிக்கறது, செத்தபாம்பை அடிக்கறா மாரி”

சொன்ன மனிதரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். நல்லா இருந்தமனுசன்.. இப்படி ஆஜ்தக், NDTV பாக்கறதுன்னு எப்ப ஆரம்பிச்சாரோ, எப்ப மும்பையில தி இந்து பேப்பர் வாங்க ஆரம்பிச்சாரோ, அப்பவே சட்டையைக் கிழிக்கிற நிலை வந்திருச்சு, பாவம்.

”உங்களுக்கு எண்களை எண்ணத் தெரியுமா?”

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. சிறு கோபத்துடன் “ Don’t insult others – just because they have different opinion” என்றார்.

“அட உங்களை இகழ்ந்தெல்லாம் பேசலை; நீங்க இஞ்சினீயர். எனவே கேட்டேன். எந்த எண் வரை எண்ணத் தெரியும்?”

“கோடி..கோடி .. ஏன்?”

“வெரிகுட். அப்ப இந்த கணக்குக்கு உடனே பதில் சொல்லணும். 127 * 7 =? ”

“ஏழேழு நாப்பத்தொம்பது. ஒம்பது போட்டுக்குங்க. நாலு இருக்கு. ஏழிரெண்டு பதினாலு. அதோட நாலு கூட்டி…”

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

“பதில் .. உடனே “

“இருங்க” என்றார் எரிச்சலில் “ இது பெருக்கறது. கொஞ்சம் புத்திசாலித்தனமா கணக்குப் போடணும்”

“அட! கோடிக்கணக்குல பெரிய எண் தெரியும். ரொம்பக் குட்டியான எண்ணைப் பெருக்கத் தெரியலை உங்களுக்கு?”

அவர் விழித்தார்.

“அக்னி போகிற ரேஞ்ச் வேற. அதனோட இயற்பியலே வேற. ஷக்தி , ஒரு செயற்கைக்கோளை சிறு தொலைவில் அடிக்கிற விச்யம் வேற. இதுக்கு துல்லியமான அறிவியல், தொழில்நுட்பம், அறிவு வேறுவிதமாகத் தேவை. எல்லாத்தையும் எம் முப்பாட்டன் செஞ்சான்னு சொல்லிட்டுத் திரியாதீங்க. ஏற்கெனவே அவனவன் உங்களைப் பாத்துச் சிரிக்கறான்”

“இருந்தாலும்….”

“ராஜதானி ரயில் விட்ட டெக்னாலஜியை வைச்சுகிட்டு, ஆலந்தூர்ல மெட்ரோ ரெயிலை நிறுத்தவோ கிளப்பவோ முடியாது. ரெண்டும் தண்டவாளத்துல ஓடுதுங்கறதுக்காக , ரெண்டும் ஒண்ணுகிடையாது”

அவர் எதிர்க்க வந்தார். கையை நீட்டினேன்.

‘ரைட்டு அப்புறம் பாப்போம். வேலை இருக்கு எனக்கு. உ ங்களுக்கு?”

படித்தும் அறிவில்லாதவர்களுடன் பேசுவது வீண்.

– சுதாகர் கஸ்தூரி

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories