December 6, 2025, 3:38 AM
24.9 C
Chennai

கேவலம்… +2 தேர்வு முடிவுகளால் வெளியான அதிர்ச்சி! போராடும் அரசு ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டும்!

jacto geo - 2025

கடந்த வருடம் தேர்வு நேரத்தில் அரசு ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் பெரும் கண்டனத்தைப் பெற்றது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் சந்தித்தது. ஜாக்டோ ஜியோ எனும் அமைப்பு, திமுக., தலைவர் ஸ்டாலினின் தூண்டுதலால், ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க அரசியல் ரீதியாக போராட்டங்களை தொடர்ந்து நடத்தின. திமுக., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம், இன்னும் சலுகைகள், சம்பள உயர்வெல்லாம் உண்டு என்று திமுக., தலைவர் ஸ்டாலின் கூறியதும் அதற்கு ஜாக்டோஜியோ தலையாட்டியதும் கண்டு பெற்றோர்களின் வயிறு எரிந்தது.

அப்போதே பெற்றோர்கள் தங்களது அதிருப்தியையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தினர். தேர்வு நேரத்தில் திட்டமிட்டு, ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறினர். ஆனால், அது தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு நடத்திய போராட்டங்களாக பின்னர் வெளிப்பட்டது. தொடர்ச்சியான பள்ளிமூடல் நாட்கள். போராட்டத்தை சமாளிக்க தனியார் துறை ஆசிரியர்களை இட்டு நிரப்ப முயன்ற அரசின் நடவடிக்கைகள் என பல்வேறு குழப்பங்கள்.

இவற்றின் வெளிப்பாடு, தேர்வு முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது. இதற்காக, ஆயிரக்கணக்கிலும் லட்சத்துக்கு நெருக்கமாகவும் சம்பளம் வாங்கி, டியூசன் என்ற பெயரில் தனி வகுப்புகள் நடத்தி பணத்தில் மட்டுமே குறியாக இருக்கும் அரசு ஆசிரியர்கள் வெளியில் தலை காட்டவே வெட்கித் தலை குனிய வேண்டும்.

தேர்தலில் தபால் ஓட்டு போடுவதிலும், தேர்தலில் பூத் வேலை பார்ப்பதிலும் திமுக.,வுக்கு ஓட்டு போடுங்க என்று கூவுவதிலும் குறியாக அரசியல் வேலை பார்த்த ஆசிரியர்கள் இனி, வெட்கம் மானம் சூடு சுரணை ஏதாவது இருந்தால் கல்வி கற்றுக் கொடுக்கும் வேலையில் இருந்து அரசியலில் நேரடியாக சேர்ந்து தேர்தல் வேலை பார்க்கலாம் என்று பெற்றோர்கள் வெளிப்படையாகவே விமர்சனம் செய்கின்றனர்.

அதற்குக் காரணம், அரசுப் பள்ளிகளில் இந்த வருடம் பெரிதும் சரிந்துள்ள தேர்ச்சி சதவீதம்தான்!

2,700 அரசு பள்ளிகளில் 80 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 91.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.பல புள்ளி விவரங்களை அரசு வெளியிடாத நிலையில், தற்போது தற்போது சில விவரங்கள் கசிந்துள்ளன.

அதன்படி, 2,700 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்றும், 1200 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு 238 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற நிலையில், தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருப்பது கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் என முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவிற்கு இல்லை! அதிகபட்சமாக கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1500 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 1200 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனிடையே, பள்ளி கல்வித்துறையில் 2019- 20ம் கல்வியாண்டில் அறிமுகப் படுத்தப்பட உள்ள புதிய பாட புத்தகங்களுக்கு 30 ரூபாயிலிருந்து, 180 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு வர உள்ளன என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories