December 6, 2025, 4:32 AM
24.9 C
Chennai

குண்டு வெச்சவர்னு தவறுதலா எழுத்தாளர் படத்தை வெளியிட்டுட்டோம்!

amara majeeth twitter - 2025

இலங்கை வெடிகுண்டு தொடர்பில், தவறுதலாக தனது படத்தை வெளியிட்டுள்ளதாக  அமெரிக்க எழுத்தாளர்  அமரா மஜீத் தனது டிவிட்டர் பதிவில் தெரிவிக்க, அதற்காக மறுப்பு தெரிவித்து இலங்கை போலீசார் அறிக்கை அளித்துள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் என 9 பேரின் படங்களை இலங்கை அரசு வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக இப்போது அரசு விளக்கம் அளித்துள்ளது.

நேற்று இலங்கை அரசு, குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் குறித்த படங்களை வெளியிட்டது. இதில், தனது படம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் அமாரா மஜீத் என்பவர். இவர் அமெரிக்க எழுத்தாளர். இவர் உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தைச் சேர்ந்த நிலையில், இதுபோன்ற செயல்கள் மேலும் பிரச்னைக்கு உள்ளாக்கும் என்று கூறிய அவர், இலங்கை அரசு இதனை உடனே நிறுத்தவேண்டும் என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில், இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட, தேடப்படும் நபர்களில் பாத்திமா காதியா என்ற பெண்ணின் பெயரில் அமாரா மஜீத் என்பவரது படம் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் அறிவித்துள்ளனர்.

srilankancorrection - 2025

ஆனால் இவரது டிவிட்டர் கணக்கு ஏப்ரல் 2019ல், அதாவது தற்போதுதான் தொடங்கப்பட்டிருப்பது என்பதும், அதற்குள் 600க்கும் மேற்பட்டோர் பாலோ செய்வதும், வெறும் 4 டிவிட்கள், அதுவும் தன்னை சம்பந்தப் படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை அரசு வெளியிட்டதாகக் கூறப்படும் தகவலை மட்டும் பதிவு செய்திருப்பதும், இவர் குறித்த தகவலில் மேலும் சந்தேகத்தையே எழுப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories