குடியிருந்த அரசு வீட்டை நல்லகண்ணு காலி செய்தார். அவருக்கு அரசு புதிய வீடு கொடுக்க ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தல்
இது இன்றைய பரபரப்பு செய்தி விவாதம்
சரி நல்லகண்ணுக்கு எந்த வருஷம் வீடு கொடுத்தாங்க
2007 திமுக கம்யூனிச கூட்டணி ஆட்சியில்
நல்லகண்ணு என்ன சுதந்திர போராட்ட தியாகியா ? இல்லை
அவங்க குடும்பத்துல யாராச்சும் ராணுவ யுத்தத்தில் இறந்து போனார்களா ? இல்லை
அவரு இலவச வீட்டு மனை பட்டா வாங்குமளவு வறுமையில் வசிப்பவரா நிச்சயமா இல்லை?
பின்ன அவருக்கு எதுக்கு வீடு கொடுத்தாங்க .?
அவரு நேர்மையான அரசியல்வாதி ?
சரி வாதத்துக்காக அவரை நேர்மையானவருன்னே வெச்சுப்போம். அப்போ அவரை தவிர தமிழ்நாட்டுல வேற நேர்மையான அரசியல் தலைவரே இல்லியா ?
நேர்மையான தலைவரா இருந்தா மக்கள் வரிப்பணத்துல அரசு வீட்டுல இத்தனை வருஷம் ஓசியில குடியிருக்க சம்பதிப்பாரா ? அப்போ நல்லகண்ணு நேர்மையான ஆளும் இல்லையா?
சரி இப்போ வீட்டை விட்டு துரத்தி காலி பண்ண சொன்னாங்களா ? இல்லை அந்த வீட்டை பராமரிப்பு பணிக்காக இடிச்சு புது வீடு கட்டித் தரப் போறாங்க…
இதுக்கே ஏன் இவ்ளோ பில்டப்பு.? ஸ்டாலின் கண்டனமாம்!
இத்தனை வருஷமா மக்கள் வரிப் பணத்த சுரண்டி ஏமாற்றி அரசு ஓசி வீட்டுல இருந்ததை… கம்யூனிச யோக்கிய சிகாமணிகள் ஏன் வாயே தொறக்கலை ?
நல்லகண்ணு என்ன சுதந்திர போராட்ட தியாகியா ?
கம்யூனிசகாரன் ஆட்டோ ஊழியரிலிருந்து அரசு ஊழியர் வரை அனைவரின் சம்பளத்தை சந்தான்னு சுரண்டி
ஊருக்கு ஊரு பெரிய பெரிய ஆபீஸ் கட்டி ஊருக்கு ஊரு கட்சிக்கு சொந்த காரு வெச்சு சொகுசா தானே வாழுறான்.
கட்சி தலைவனுக்கு வீடு கொடுக்க வக்கில்லையா ?
ஊருக்கு ஊரு அந்த சங்கம் இந்த சங்கம்னு குறைஞ்சது நாலு கட்டிடமாவது சொந்தமா கம்யூனிஸ்ட் வெச்சிருக்கான். காங்கிரஸ், பி.ஜே.பிக்கு கூட இப்பிடி எல்லா மாவட்டத்துலயும் அஞ்சு ஆறு சொந்த கட்டடம் கிடையாது ?
தொழிற்சங்கம்னு சம்பளத்தை சுரண்டி கம்யூனிஸ்ட் எல்லா மாவட்டத்துலயும் குறைஞ்சது நாலு கட்டடம் வெச்சிருக்கான் அதுவும் பெரும்பாலும் மெயின் ரோட்டுல நகரின் பிரதான பகுதியில அதுல ஒண்ணுல ஒரு சின்ன ரூம் கூட உங்க கட்சி தலைவனுக்கு கொடுக்க முடியாதா ?
அரசாங்க ஓசி வீடே தான் வேணுமா ?
ஏன் சுடலை கோடி கோடியா கொள்ளையடிச்ச பணத்துல நல்லகண்ணுக்கு ஒரு சொகுசு பங்களாவே கொடுக்கலாமே!
~ கா.குற்றாலநாதன், நெல்லை



