எப்படி ஏமாத்தறாங்க மக்களே! நெஸ்லே, ஜான்சன் & ஜான்சன் பொருட்களை வாங்கும் போது கவனம்!

johnsan - 2026

மத்திய அரசு, இந்தியா முழுவதும் பொருட்களுக்கான வரி ஒரே அளவில் கொண்டு வருவதற்காக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்தது.

ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறைக்கு பின்னர், ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்திருந்தது.

ஆனாலும், மத்திய அரசு செய்திருந்த வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் பொருட்களின் விலையைக் குறைக்காமல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மக்களிடம் தொடர்ந்து அதிக பணம் பெற்று மோசடி செய்து வந்தது அம்பலமானது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் இந்த மோசடியால் தற்போது அந்நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் குறையும் பட்சத்தில் அதற்கேற்றவாறு பொருட்களின் விலையை உடனடியாக மாற்ற வேண்டும்.

ஆனாலும் சில நிறுவனங்கள் பொருட்களின் விலையை மாற்றாமல் ஜிஎஸ்டி வரிக்குறைப்பை தாங்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டு மக்களிடம் பழைய வரி விகிதங்களின் படி கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!
nestle - 2026

2017 நவம்பரில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

ஆனால் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பொருட்களின் விலையைக் குறைக்காமல் அதே 28% ஜிஎஸ்டியையே மக்களிடம் தொடர்ந்து வசூலித்து வந்தனர்.

இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை, என்.ஏ.ஏ (NAA – National Anti-profiteering Authority) அமைப்பு கண்டறிந்தது. எனவே அந்த நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி சட்டம் 171(3A) பிரிவின் படி ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போன்று ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டதால் பிரபல சாக்லேட் நிறுவனமான நெஸ்லேவுக்கு ரூ.90 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரும் நிறுவனங்கள் இப்படி பொதுமக்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேர வேண்டிய வரி பலன்களை அபகரித்து, கோடிகளில் சம்பாதித்திருப்பது நுகர்வோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி இந்த பொருட்களை வாங்கும் போது ஜிஎஸ்டி வரியை சரி பார்த்து, குறைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்து வாங்குங்கள். நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் உங்கள் உழைப்பினால் வந்தது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories