ஆண் – பெண் மலட்டுத் தன்மை நீங்க:
வெற்றிலைக் கொடி வேர் – 100 கிராம்
மிளகு – 10 கிராம்
இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துத் தூள்செய்து கொள்ளவும். அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, இம்மருந்தில் இரண்டு கிராம் அளவு 21 நாட்கள் சாப்பிட்டு வர, குழந்தைகள் பிறக்கும்.
வெற்றிலையை அனலில் வாட்டி மார்பகங்களில் கட்டி வந்தால், தாய்ப்பால் தேவையான அளவில் சுரக்கும்.
வெற்றிலை, மஞ்சள், சுக்கு ஆகிய மூன்றையும் விழுதாய் அரைத்து நெற்றியில் பற்றுப் போட, தலைவலி உடனே குணமாகும்.