December 7, 2025, 3:12 AM
24.5 C
Chennai

மச்சம் சொல்லும் மிச்சம்: உள்ளங்கையில்…

Mole-3
Mole-3

ஆண்களுக்கு வலது கையில் மச்சம் இருப்பது மிகவும் உயர்ந்த அம்சமாகும். வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர்களாக இருப்பார் என்பது விதி.

குறிப்பாக கணித சாஸ்திரம், நீதி இயல், பொறியியல் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள். சிறுகச் சிறுக முன்னேறி உன்னதமான நிலையை அடைவார்கள்.

கை விரல்களில் மச்சம்
கைவிரல்களில் அமையும் மச்சங்களுக்கு ஏறத்தாழ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான பலன்கள்தான். கட்டைவிரலில் மச்சம் இருந்தால், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர்.

ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால், தலைமைப்பொறுப்பு வகிப்பவர்களாக இருப்பர். ஆட்சி அதிகாரம் செய்யக்கூடிய அம்சம் பெற்றவர்களாக இருப்பர். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.

நடுவிரலில் மச்சம் இருப்பின், கலை உள்ளம் படைத்தவர்களாக இருப்பர். குறிப்பாக வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், நடனம், நாடகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

மோதிர விரலில் மச்சம் அமைந்திருப்பின், அழகான தோற்றமும் அளவான உடல் அமைப்பும் அமைந்திருப்பது இயற்கை. எதையும் கூர்மையாக விளங்கிக்கொள்ளும் இயல்பு உண்டு. எதிர்ப்புகளை இவர்கள் முறியடிப்பார்கள்.

சுண்டு விரலில் மச்சம் இருந்தால், சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள் என்பது சாஸ்திர விதி. கல்வித் துறையில் இவர்களுக்கு மிகவும் உயர்ந்த தகுதி அமையும்.

எதிலும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது இவர்களின் குணம். தனியார் பதவியில் உயர்நிலையில் இருப்பார்கள்.

அரசியல் துறையில் பேச்சாளராக இருத்தல், வழக்கறிஞராகப் பேரும் புகழும் அடைதல். இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால், விகாரமான தோற்றத்தைப் பெற்று இருப்பார்கள்; பிடிவாத குணம் இருக்கும்.

வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.

புத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை செல்வச் செழிப்புடன் இருக்கும். உயர் பதவியை அடைவார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் அளவான நிறைவான வாழ்க்கையையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் நினைத்ததை நடத்தி முடிப்பவர்கள் .

வளரும்…….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories