spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுகண் தொற்றியிருந்தது காத்துக் கொள்ள இதனை பின்பற்றுங்கள்!

கண் தொற்றியிருந்தது காத்துக் கொள்ள இதனை பின்பற்றுங்கள்!

- Advertisement -

நீங்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றும் போது உங்க கண் பார்வை திறனை வயதான காலம் வரை பாதுகாக்க முடியும்.

ஏனெனில் ஆரோக்கியமான உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்க கண்களுக்கு தேவையான போஷாக்குகளை அளிக்க கூடும்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஜீயாக்சாண்டின், லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் நம் கண்பார்வைக்கு மிகவும் உதவுகின்றன.

அமெரிக்கன் ஆப்டோமெட்ரிக் அசோசியேஷன் (AOA) மற்றும் அமெரிக்கன் அகாடமி ஆஃப் கண் மருத்துவம் (AAO) போன்ற நிறுவனங்கள் AREDS அறிக்கைகளின் அடிப்படையில் கண் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்களை நமக்கு பரிந்துரைக்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது கண் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. இதில் மீன்கள் வளமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரமாகும்.

எண்ணெய் உள்ள மீன் என்பது அதன் குடல் மற்றும் உடல் திசுக்களில் எண்ணெய் காணப்படும். எனவே எண்ணெய் உள்ள மீன்களை அதிகளவில் எடுத்துக் கொள்ளும் போது அதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன்கள் டுனா, சால்மன், டிரவுட், கானாங்கெளுத்தி, மத்தி, நங்கூரங்கள், ஹெர்ரிங் போன்றவை ஆகும்.

​நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
நட்ஸ் வகைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நட்ஸில் அதிகளவு விட்டமின் ஈ காணப்படுகிறது. இது வயது தொடர்பான கண் பார்வை பாதிப்பிலிருந்து நம்மை காக்கிறது.

வால்நட்ஸ்,பிரேசில் நட்ஸ்,முந்திரி பருப்பு
பீனட்ஸ் பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

​விதைகள்
நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளைப் போலவே விதைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

சியா விதைகள், ஆளி விதைகள், சணல் விதைகள் போன்றவை கண் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

​சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. விட்டமின் ஈ மற்றும் விட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது வயதான காலத்தில் ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது.

விட்டமின் சி நிறைந்த உணவுகள் லெமன், ஆரஞ்சு, திராட்சை பழம்

கீரைகள்
பச்சை இலை காய்கறிகளில் லுடின், ஜீயாக்சாண்டின் போன்ற இரண்டும் நிறைந்து காணப்படுகிறது. இது விட்டமின் சி நிறைந்த நல்ல ஆதாரமாகும்.

கீரைகள் காலே, காலார்ட்ஸ் போன்ற கீரை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

​கேரட்
கேரட்டில் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. பீட்டா கரோட்டின் தான் கேரட்டிற்கு ஆரஞ்சு நிறத்தை தருகிறது.

இதிலுள்ள விட்டமின் ஏ கண் பார்வைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது ரோடோப்சின் எனப்படும் புரதத்தின் ஒரு அங்கமாகும். இது விழித்திரை ஒளியை உறிஞ்ச உதவுகிறது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் விட்டமின் ஏ ஆக கண்ணுக்கு உதவுகிறது.

​சர்க்கரைவள்ளிக்கிழங்கு
கேரட்டை போலவே இனிப்பு உருளைக்கிழங்கிலும் பீட்டா கரோட்டின் நிறைந்து காணப்படுகிறது. இதிலும் விட்டமின் ஈ எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளன.

முட்டை
முட்டைகள் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஒரு சிறந்த மூலமாகும். இது வயது தொடர்பான பார்வை இழப்பு அபாயத்தை குறைக்கும். முட்டைகள் வைட்டமின்கள் சி மற்றும் ஈ, மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் நல்ல மூலங்களாகும்.

பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், வெண்ணெய், நெய், சீஸ், க்ரீம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கிறது. எப்படியெனில் உடலில் வைட்டமின் ஏ குறைவினால் தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு மற்றும் வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் உள்ளது. மேலும் கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குளுததையோன் என்னும் பொருளும் உள்ளது. இதனால் கண்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

சோயா பொட்கள்
சோயாவில் குறைந்த அளவில் கொழுப்புக்கள் மற்றும் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. ஆகவே டயட்டில் இருப்போர்கள் கண்டிப்பாக இதனை உணவில் சேர்க்க வேண்டும். மேலும் இதில் உடலுக்குத் தேவையான ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ உள்ளது.

​தண்ணீர்
தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும். இது கண் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதிகளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க உதவ செய்யும்.

பெர்ரிஸ் பெர்ரி பழங்களில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களுக்குப் பளிச்சென்ற பார்வையை அளிக்கிறது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் இரவு நேரத்திலும் தெளிவான பார்வையை அளிக்கிறது.

வைல்ட் ரோஸ் டீ
கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது.

கொத்தமல்லி இலைகள்
கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது.

அவகேடோ அல்லது பட்டர் ப்ரூட்
கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் அனைத்து சத்துக்களும் அதாவது வைட்டமின் பி, சி, ஈ
லூடைன், பீட்டா கரோடின் கொண்டது அவகேடோ.

500 மி. கி விட்டமின் சி
400 சர்வதேச அலகுகள் விட்டமின் ஈ
10 மி. கி லுடீன்
2 மி. கி ஜீயாக்சாண்டின்
80 மி. கி ஜிங்க் ஆக்ஸைடு
2 மி. கி காப்பர் ஆக்ஸைடு

காண்டாக்ட் லென்ஸ்கள் அணிபவர்கள் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க மருத்துவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

அதிக சூரிய ஒளியில் கண்புரை ஏற்படக் கூடும் என்பதால் சன் கிளாஸை அணிந்து செல்வது நல்லது.

புகைப்பழக்கத்தை தவிருங்கள்
கண் நோய் பற்றிய குடும்ப வரலாறு இருந்தால் தொடர்ச்சியான கண் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

கெமிக்கல் நிறைந்த வேலைகள் போன்றவற்றை செய்யும் போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள்.

உங்க காண்டாக்ட் லென்சுகளை அணிவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

மருத்துவர் பரிந்துரைக்கும் கண்ணாடிகள் அல்லது மருந்துகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

கம்பியூட்டர் தொடர்பான வேலைகளை செய்யும் போது ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுங்கள். 20 அடி தூரமுள்ள பொருட்களை 20 விநாடிகள் பாருங்கள்.

டயாபெட்டீஸ் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான அளவில் எடுத்து வர வேண்டும். குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.

வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும்.

பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள்.

தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள். கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள்.

ஒரு நிமிடம் களித்து, தண்ணீரை மாற்றி அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யுங்கள். கண்களில் உள்ள தொற்றை சரி செய்ய மிகவும் உதவும். மேலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

கண் உடல்நலப் பிரச்சினைக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதன் மூலம் அவை மோசமடைவதைத் தடுக்கலாம். எனவே கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe