spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஉடல் கூறும் மொழி அறிந்தால்..!

உடல் கூறும் மொழி அறிந்தால்..!

- Advertisement -
body

மனித உடலுக்குள் உண்டாகும் பல்வேறு நோய்க்களுக்கும் நம்முடைய உடலே சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்படி நம்முடைய உடல் வெளிக்காட்டும் அறிகுறிகளை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டாலே எந்த நோயையும் மிக எளிதாக அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தீர்வைப் பெற முடியும்.

  1. கண்கள் உப்பியிருந்தால்…

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

  1. கண் இமைகளில் வலி..

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  1. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் …

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

  1. கண்கள் உலர்ந்து போவது..
    நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

  1. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் ….

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

  1. முகம் வீக்கமாக இருப்பது ….

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

  1. தோல் இளம் மஞ்சளாக மாறுவது …

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

  1. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் …

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

  1. பாதம் மட்டும் மரத்துப் போதல் …

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

  1. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் …

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

  1. சிவந்த உள்ளங்கை ….

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

  1. வெளுத்த நகங்கள் ….

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

  1. விரல் முட்டிகளில் வலி …
    ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

  1. நகங்களில் குழி விழுதல் …..

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

  1. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் ….

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

  1. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் ….

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

  1. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. ….

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

உங்களுடைய முகத்தில் அடிக்கடி அரிப்பு மற்றும் லேசான எரிச்சல் ஆகியவை இருக்கிறது என்றால் உங்களுடைய தலைமுடி சுத்தமாக இல்லையென்றும் தலைமுடி பிரச்சினை, பொடுகுத் தொல்லை ஆகியவையும் இருப்பதாக அர்த்தம்.

உங்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகள் இருந்தால் உங்களுடைய கால்கள் மற்றும் கைவிரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இல்லை என்று அர்த்தம். உடனே நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள்.

கண்களோ அல்லது மூக்கிலோ அடிக்கடி தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு விரைவில் ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.

உங்களுடைய காதுக்குள் அதீத குடைச்சலோ வலியோ இருந்தால் அது வெறுமனே காது பிரச்சினை என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. இப்படி இருந்தால் உங்களுக்கு விரைவில் காய்ச்சல் ஏற்படப் போகிறது என்று பொருள்.

உடலில் கை மடிப்பு, கழுத்து மடிப்புப் பகுதி, கால் இடுக்கு போன்ற பகுதிகளில் கருப்பான பட்டை போல இருந்தால் உங்களுடைய கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கிறது என்று நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறி என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

உடலில் அதிக இன்சுலின் சுரப்பு இருந்தாலும் அதிக அளவில் பசி எடுக்கும். அது உடலின் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை வெளிக்காட்டுகிறது

கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால் உங்களுடைய உடலில் அதிக அளவிலான உடல் சூடும் அழுத்தமும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கால்களின் முழங்கால் மூட்டு மற்றும் கால்களின் மணிக்கட்டுப் பகுதியில் வலி எடுத்தால் உடலில் அதிக எடை கூடிவிட்டது என்றும் அதை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று அர்த்தம்.

தொடர்ந்து முதுகுத் தண்டு அல்லது இடுப்புப்பகுதி அதிகமாக வலித்தால் அந்த பகுதியில் உள்ள இரண்டு எலும்புகளும் மிருதுவாகி, எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது என்று அர்த்தம்.

உங்கள் உதட்டில் அல்லது மேல் தோலில் வெடிப்பு மற்றும் பிளவு, தோல் உரிதல் ஆகியவை உண்டாகுமேயானால் உங்களுடைய உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப் பசையும் குறைந்து விட்டது என்று அர்த்தம்.

நம்முடைய தோள்பட்டை, முதுகுத்தண்டு, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமாகவோ வலியுடனோ இருந்தால் உங்களுடைய உடலில் காற்றின் அழுத்தம் அதிகமாகி, வாயு தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

உங்களுடைய கை விரல் மற்றும் கண்களுக்கு மேலே மெல்லிய கருப்புக்கோடு விழுந்தால் இதயத்தில் பிரச்சினை தொடங்கப் போகிறது என்று அர்த்தம்.

வெடித்த, வறண்ட, சுரசுரப்பான குதிகால் அநேகருக்கு வலி கொடுக்கலாம். இரத்த கசிவு ஏற்படலாம். வீக்கம் தரலாம். நடக்கக்கூட கஷ்டமாக இருக்கலாம். இது வைட்டமின் ஏ சத்து குறைவினால் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மருத்துவ ஆலோசனைப்படி வைட்டமின் ‘ஏ’ எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக வைட்டமின் ஏ எடுத்துக்கொள்வதும் தீங்கு விளைவிக்கும். சோற்றுக்கற்றாழையில் ஆன ஜெல் தடவுவது நல்ல நிவாரணம் தரும்.

முட்டுவலி பிரச்சனை, தண்டு வட பாதிப்பு, சிறுநீரகக் கற்கள் என பல காரணங்களைக் கூறலாம். நீங்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்கா விட்டால் கூட முதுகு வலி இருக்கும். தண்டு வடத்தின் குஷன் போன்ற அமைப்பு நீரின் அளவினைப் பொறுத்தே அமையும்.

அதிக அழுத்தம் தண்டு வடத்தில் ஏற்படும் பொழுது அங்கு வெற்றிடம் ஏற்படும். மீண்டும் நீர் சத்து உள்ளே செல்லும். அப்பொழுது உடலில் நல்ல நீர் சத்து தேவை. அதுவே முதுகுத் தண்டினை பல பாதிப்புகளிலிருந்து காப்பாற்றும்.

காதில் பல விதமான சத்தங்கள் கேட்பதாக சொல்லுவார்கள். இது சாதாரணமாக காணப்படும் பிரச்சனைதான். சிலருக்கு இது ஒருசில நிமிடங்களில் போய்விடும். சிலருக்கு இது அடிக்கடி தொந்தரவினைக்கொடுக்கும். இதற்கு பொதுவான காரணம் அதிக சத்தத்தின் சூழ்நிலையில் இருப்பது ஆகும். மேலும் காதில் அழுக்கு சேருதல் குறிப்பிட்ட சில வகை மருந்துகள் இவையும் காரணமாகின்றன. நரம்பு பாதிப்பினாலும் இவ்வாறு ஏற்படலாம். இரத்த குழாய் சுருக்கம், இரத்த சோகை, சர்க்கரை நோய், வைட்டமின் பி12 சத்து குறைபாடு ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

கண் கீழே உள்ள கருவளையம் சரிவர தூக்கமின்மையைக் குறிக்கும். சில உணவு வகைகளின் ஒவ்வாமையினாலும் இவ்வாறு ஏற்படக் கூடும். பொதுவில் பால், கோதுமை, முட்டை, புளிப்பு, சோளம் இவைகளைத்தான் முதலில் ஒவ்வாமைக்கான பரிசோதிப்பது உண்டு. நீங்கள் இதில் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் ஒன்றினை ஒருவாரம் தவிர்த்துப் பாருங்கள். அதிலேயே உங்களுக்குத் தெரிந்து விடும்.

நாக்கு எரிகின்றது, உதடுகள் எரிகின்றது, வாய் எரிகின்றது என்று சொல்கிறார்களா? முதலில் அவர்கள் கரகரவென தரையை பிரஷ் போட்டு தேய்ப்பது போல் பல்லையும் நாக்கையும் சுத்தம் என்ற பெயரில் முரட்டுத்தனமாக தேய்க்கின்றார்களா என்பதனை கண்டறியுங்கள். சரியில்லாத பொருந்தாத பல்செட் வைத்திருக்கின்றார்களா என்று பாருங்கள்.

இவையெல்லாம் சரியாக இருந்தால் அவர்களுக்கு இரும்பு, ஸிங்க், பிகாம்ளெக்ஸ் குறைபாடு இருக்கலாம். ரத்த பரிசோதனை செய்து இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும். மேலும் ஸிங்க், பிகாம்ளெக்ஸ் இதனையும் மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பினாலும் இந்த வாய் எரிச்சல் ஏற்படலாம். தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு இத்தகு குறைபாடுகள் ஏற்படும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பு : மருத்துவரை அணுகி மருத்துவத்தையும் பின்பற்றவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe