December 5, 2025, 6:54 PM
26.7 C
Chennai

கனவின் விளைவு: குதிரை காட்டும் அறிகுறி!

dream-1
dream-1

கனவில் நீங்கள் ஒரு குதிரையைப் பார்த்தால் வரும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் சரியாக நடக்கும் என்பதைக் குறிக்கிறது. பெரிய அளவு பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதை குறிக்கிறது. பல குதிரைகளை நீங்கள் கனவு காண்பது செல்வம் அதிகரிப்பதை குறிக்கிறது.

குதிரைகள் ஓடுவதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

குதிரை வண்டி பற்றி நீங்கள் காணும் கனவு நல்ல செய்தியை குறிக்கிறது. குதிரை வண்டியில் ஒரு துணி இருப்பதை நீங்கள் கண்டால் அது இன்னும் அதிக நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.

நீங்கள் குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டால் அதிக புகழ் மற்றும் செல்வம் இரண்டையும் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

விவாகரத்துப் பெற்ற பெண் குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு மறுமணம் நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறது.

குதிரை பின்னோக்கி சவாரி செய்வது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் அது மோசமான சம்பவங்கள் நடக்கப்போவதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென குதிரை மீது இருந்து குதிப்பது போல கனவு கண்டால் நீங்கள் புதிதாக செய்து வரக்கூடிய வேலையில் திருப்தியான முடிவுகள் கிடைக்காது என்பதை குறிக்கிறது.

குதிரையிலிருந்து கீழே விழுவதைப் போல நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதை குறிக்கிறது.

horse 1
horse 1

கனவில் ஒரு குதிரை உங்களை உதைப்பது போல கண்டால் நீங்கள் அதிகம் விரும்பும் ஒருவரால் புறக்கணிக்கப்படுகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் உங்களுடைய உடல் நிலையிலும் பிரச்சனைகள் ஏற்பட போவதை குறிக்கிறது.

கனவில் நீங்கள் ஒரு குதிரையால் கடிக்கப்படுவதைப் போல கண்டால் விரைவில் உங்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

கனவில் நீங்கள் ஒரு குதிரையை பின்தொடர்வது போல கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல கௌரவம் கிடைக்கக்கூடிய செயல்கள் நடைபெறும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையை வாங்குவது போலவோ அல்லது விற்பது போலவோ கனவு கண்டால் நீங்கள் மிகவும் நம்பும் ஒருவரால் ஏமாற்றப்படலாம் என்பதை குறிக்கிறது.

உங்களுடைய கனவில் நீங்கள் ஒரு குதிரைக்கு உணவளிப்பது போல கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு வரப்போகிறது என்பதை குறிக்கிறது. நீங்கள் சரியாக அந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையை தாக்குவது போல கனவு காண்பது நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் சிக்கல் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

ஏராளமானவர்களோடு சேர்ந்து குதிரை பந்தயத்தை காண்பது போல கனவில் கண்டால் உங்கள் நண்பர்களுடனான உறவுகள் மோசமடையும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு குதிரையின் கழிவை உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் கூடவே இருக்கும் ஒரு நபர் எளிதில் தீர்த்து வைப்பார் என்பதை குறிக்கிறது.

ஒரு குதிரை சிறகுடன் இருப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் மிகப்பெரிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.

காயமடைந்த குதிரையை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது விரைவில் உங்களுடைய நண்பர் ஒருவர் சிக்கலில் மாட்டப்போகிறார் என்பதை குறிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories