கண் மாந்தம் போக…
குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் மார்புச்சளி, கண மாந்தம், மாந்த ஜூரம் இவை போக நல்வேளைப் பூவை சுத்தம் செய்து சாறு பிழிந்து அத்துடன் கொஞ்சம் முலைப்பால் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சீக்கிரத்தில் குணமாகும்.
கட்டிகளுக்கு…
எருக்கம்பாலில் மஞ்சளை உரைத்துக் கட்டியின் உச்சியில் மட்டும் காலை, மாலை தடவி வர கட்டி அப்படியே அமுங்கி விடும்.
பலாப் பாலை எடுத்து நெறிக்கட்டிகள், நீண்ட நாள்களாக பழுத்து உடையாத குளிர்க்கட்டிகள் ஆகியவற்றின் மேல் பூசி வர அவை எளிதில் உடையும் அல்லது அமுங்கி விடும்.
கல்லீரல் சீர்பட..
- எலுமிச்சை சாறு. தக்காளி சாறு. தேன் மூன்றும் சம அளவில் கலந்து காலை, மாலை இரு வேளையும் வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் அப்பிட்டு வர கல்லீரல் சீர்கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் க்ஷயரோக இருமலும் கூடக் குறையும். இரத்த ஓட்டம் சீர்படும். இருதயமும் பலமடையும். மேலும் சிறுநீரிலுள்ள சர்க்கரையும் குறையும்.
கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் ஏதேனும் இருந்தால் துளசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.
ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும் பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து உடனே சாப்பிட்டு விடுங்கள். சீக்கிரத்தில் குணமாகி விடும்.
கண்களில் அரிப்பா?
கண்களில் அரிப்பும் நமைச்சலும் ஏற்பட்டால் உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி ஒரு துணியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறெடுத்து கண்களைக் கழுவுங்கள். சரியாகி விடும்.
கண்வலி இருந்தாலும், கண் சிவப்பு, அரிப்பு போன்றவை இருந்தாலும் வில்வத் தளிரை வதக்கி, சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் கொடுக்க குணமாகும்.