அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: காதில் சீழ், காலரா, காசநோய், கால்வெடிப்பு!

health tips 1
health tips 1

காதில் சீழ் வடிகிறதா?

பழுத்த எருக்கன் இலையை நெருப்பில் காட்டி வதக்கி சாறு எடுத்து இரண்டு சொட்டுகள் காதில் விடலாம். கற்றாழையை வாட்டி வதக்கி அதன் சாற்றை காதில் விட்டாலும் குணம் தெரியும்.

ஊமத்தை இலைச்சாறு. நல்வெண்ணெய் சம எடை சேர்த்துக் காய்ச்சி காதில் இரண்டு மூன்று சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வடிவது நிற்கும்.

காலரா வராமலிருக்க…

காலரா என்பது ஒரு தொற்று வியாதி, ஊரில் காலரா என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எலுமிச்சை ரசம் காலராவுக்கு சிறந்த தடுப்பு மருந்து. அவ்வப்போது எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தி வர காலரா வராது.

கால் வெடிப்புக்கு…

ஒரு ஸ்பூன் சூடான விளக்கெண்ணெயில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வெடிப்பில் தடவி அரை மணி நேரம் கழித்து காலைக் கழுவ வேண்டும். காலை, மாலை தொடர்ந்து வர சில நாள்களில் குணமடையும்.

கடுக்காய், எள், மஞ்சள், உப்பு இவற்றைச் சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து வெள்ளாட்டின் சிறுநீரில் இந்தப் பொடியைக் கலந்து இரவு படுக்கப் போகுமுன் வெடிப்புகளில் தடவி காலையில் சுத்தம் செய்து விட வெடிப்புகள் மறைந்து விடும்.

காச நோயா?

காச நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் காலை வேளையில் இரண்டு மூன்று பச்சை வெங்காயத்தை நற நறவென்று கடித்து மென்று விழுங்கி வர இரண்டொரு வாரங்களில் நல்ல குணம் தெரியும்.

டி.பி. நோய் உள்ளவர்கள் சீத்தாப்பழம் சாப்பிட்டு வரலாம். நாள்தோறும் மூன்று வேளை பெரிய சீத்தாப்பழம் ஒன்றை சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் தண்ணீர் சாப்பிட வேண்டும். ஏழெட்டு வாரங்கள் தொடர்ந்து சாப்பிட டி.பி. குணமாகும்.

கழுதைப் பாவை நாள்தோறும் சாப்பிட்டு வர காசநோய் குணமாகும்.
வெள்ளைப்பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வர
நாளடைவில் குணமாகும்.

தாளிச்ச பத்திரியை பொடி செய்து 20 குன்றி மணி எடை தேனில் குழைத்து உள்ளுக்கு சாப்பிட காச ரோகம், க்ஷயரோகம் சரியாகும். ஆடாதொடை ரசத்திலும் கலந்து கொடுக்கலாம்.

சப்பாத்திப் பழத்தைக் கொண்டு வந்து முள் போக்கி, தோல் நீக்கி, விதை நீக்கி உள்ளுக்கு சாப்பிட காச இருமலும், இரத்தம் கக்கும் இருமலும் குணமாகும்.

ஆடாதொடை இலையைக் காய வைத்துத் தூளாக்கி நெல் பொரி யுடன் தூள், சம அளவு சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்கலாம். நெல் பொரியின் தூளுக்கு பதிலாக சுக்கு. மிளகு, திப்பிலி இவற்றின் பொடியுடன் தேனும் சேர்த்துக் கொடுக்கலாம். குணமாகும்.

மயில் மாணிக்கம் என்ற மூலிகை மார்கழி, தை மாதங்களில் எங்கும் கிடைக்கும். இதன் இலையை மட்டும் அரைத்து தயிரில் கலந்து சாப்பிட காச நோய் குணமாகும். வெள்ளை ஒழுக்கு உள்ளவர்களும் இதனைச் சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories