அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! தொண்டை சதை, நரம்பு தளர்ச்சி..!

health tips 1
health tips 1

தொண்டைச் சதை கரைய…

கடுக்காய். சித்தரத்தை. திப்பிலி, சாதிக்காய் இவற்றைச் சமபங்கும். வால் மிளகு இரண்டு பங்கும் எடுத்துக் கொண்டு இவற்றை தனித்தனியே வறுத்து இடித்து கலந்து வைத்துக் கொண்டு குழந்தை களுக்கு இரண்டு சிட்டிகையளவும் பெரியவர்களுக்கு நான்கு சிட்டிகை அளவும் தேளில் குழைத்து உள்ளுக்குக் கொடுத்து வர மூன்று மாதங்களில் சதை கரைத்து விடும்.

திருநீற்றுப் பச்சை இலை. கற்பூரவல்லி இலை, மஞ்சள் கரிசலாங் கண்ணி இலை மூன்றும் வகைக்கு 100 கிராம் எடுத்து மிளகு, திப்பிலி வகைக்கு 15 கிராம் சேர்த்து அம்மியில் மை போல் அரைத்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலிலுலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை ஒரு மாத்திரை காய்ச்சிய பசும்பாலில் 40 நாள்கள் சாப்பிட டான்சில் தொண்டை ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகும்.

தொண்டைப் புண்ணா?

அன்னாசிப் பழச்சாற்றை வாயில் ஊற்றி மெதுமெதுவாகத் தொண்டையில் வைத்திருந்து விழுங்க வேண்டும் அல்லது பழச்சாறு தொண்டையில் படும்படி கொப்பளித்து வந்தாலும் தொண்டைப் புண் குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டால் சிறு கசப்புச் சுவையோடு வழவழப்பாக இருக்கும். இதனால் தொண்டைப்புண். வாய்ப்புண், கண்ணெரிச்சல். தேகக் காந்தல் குணமாகும்.

வெந்நீரில் நிறைய உப்புப் போட்டு தொண்டையில் படும்படி வைத்திருந்து கொப்பளிக்க தொண்டை வலி, தொண்டைக் கமறல் குணமாகும்.

தொண்டை நோய்கள் ஏதேனும் இருந்தால் அதிமதுரப்பாலும் கற்கண்டும் புழுங்கலரிசியையும் வாயில் போட்டு அட கொண்டு அதன் சாற்றை விழுங்க நல்வ குணம் தெரியும்.

தொண்டையடைப்பான் நீங்க…

குப்பைமேனி இலையை கைப்பிடி அளவு எடுத்து கசக்கிச் சாறெடுத்து ஒரு தேக்கரண்டியளவு உள்ளுக்குக் கொடுக்க உடனே தொண்டை யடைப்பு நீங்கும்.

தோலில் சுருக்கமா?

இளவயது ஆண் – பெண்களுக்கு சில சமயம் உடலில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதைப் போக்க ஆகாரத்திற்குப் பின் மாம்பழம் சாப்பிட்டு வாருங்கள். அத்துடன் இரவில் படுக்கப் போகுமுன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வர தோல் சுருக்கம் நீங்கி வழுவழுப்படையும். உடலில் ஒரு வித வனப்பும் ஏற்படும்.

காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள முகத்திலுள்ள சுருக்கம் காணாமல் போகும்.

நரம்புகளுக்கு வலுவூட்ட

அரைக்கீரையையும் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கூட்டு சமைத்து சாதத்தில் தாராளமாய்ப் போட்டுக் கொண்டு நெய் சேர்த்துச் சுடச்சுடச் சாப்பிட நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.

முருங்கைக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். முருங்கைக் காயையும் பூ. முருங்கை ஈர்க்கு இவற்றைக் கொண்டு ரசம். சூப்பு வைத்துச் சாப்பிட நரம்புகளுக்கு வலு கிடைக்கும். நரம்புத் தளர்ச்சிக்கு முருங்கை ஒரு கை கண்ட மருந்தாகும்.

கருவேலன் பிசினை நன்கு உலர்த்தி அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொண்டு நாள்தோறும் அரைத் தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சுரைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட நரம்புகளுக்கு நல்ல வலுவும் மூளைக்கு குளிர்ச்சியும் இருதயத்துக்கு பலமும் கிடைக்கும்.

விளாமரத்துப் பிசினை சும்பாலில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து கொட்டைப் பாக்களவு இரவு படுக்கைக்குப் போகுமுன் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories