அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தாமத ருது, இடுப்பு பிடிப்பு, முதுகுவலி, மூட்டு வலி, மகோதரம்..!

Published:

health tips 1
health tips 1

வயது வந்தும் ருதுவாகவில்லையா?

அம்மான் பச்சரிசி ஒரு கைப்பிடியளவு எடுத்து சட்டியிவிட்டு வேசாக வதக்கி அத்துடன் 10 கிராம் எள். 6 கிராம் சித்திரமூலிவேர். 6 கிராம் பனை வெல்லம், 18 கிராம் பெருங்காயம் ஆகியவற்றை தட்டிப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி பாதியாக சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் ருதுவாகும்.

இடுப்பு பிடிப்புக்கு..

பொடுதலை இலையை சுத்தம் செய்து அத்துடன் பூண்டு, மிளகு, சுக்கு சம எடை சேர்த்து மை போல் அரைத்து பாக்களவு உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டு காலையில் மட்டும் ஒரு உருண்டை வெந்நீரில் குடித்து வர ஏழு நாள்களில் பூரண குணம் தெரியும். இந்த மருந்தை சாப்பிட்டு வரும்போது உணவில் புளி சேர்க்கக் கூடாது.

மூட்டு வலி

கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து, மாவாக்கி காலை, மாலை ஓர் அவுன்ஸ் மாவு எடுத்து தேவையான அளவு தேன் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர மூட்டு வலி நீங்கும்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

முதுகு வலி சரியாக…

பவழ மல்லிகையின் இலைகளை மண் சட்டியில் போட்டு வதக்கி, ஓர் ஆழாக்கு நீர் விட்டு, அரை ஆழாக்காக சுண்டக்காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கஷாயத்தை காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வர தீராத முதுகுவலி தீர்ந்து விடும்.

மகோதரம் சரியாக…

சிறுநீரக பாதிப்பால் நோய் முற்றி கை, கால் வயிறு வீங்கி விடும். நாயுருவிச் செடியை இலையுடன் இடித்து கஷாயம் வைத்து காலை, மாலை இருவேளை இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர சிறுநீர் பிரிந்து மகோதர நோய் குணமாகும்.

Related articles

Recent articles

spot_img