அப்பாச்சி தீர்வு: உடல் அழகு, மஞ்சள் காமாலை, சீதக்கடுப்பு, இரத்தவாந்தி, காக்காய் வலிப்பு..!

Published:

health tips - 2026

உடல் அழகு பெற…

இரவு படுக்கப் போகுமுன் பசும்பாவில் தேனும், மஞ்சள் பொடியும் குங்குமப் பூவும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஒரு வித மினுமினுப்பு தோன்றும்.

மஞ்சள் காமாலைக்கு…

கீழாநெல்லி சமூலத்தை (வேர், பூ, காய், செடி) அரைத்து கொட்டைப் பாக்களவு பாலுடன் உண்டு வர மூன்றே நாள்களில் மஞ்சட்காமாலை குண மாகும். ஆளால், உப்பு, புளி நீக்கி பத்திய உணவு உட்கொள்ள வேண்டும்.

சீதக் கடுப்பு சரியாக…

மாதுளங் கொழுந்தை பொங்கும் நீரில் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட குணமாகும்.

வெள்ளாட்டுப் பாலில் பூண்டை வேகவைத்து சாப்பிட குணமாகும்.

இரத்த வாந்திக்கு…

அரசம் விதை, ஆலம் விதை இவற்றை சம அளவு எடுத்து பசும்பாலில் அரைத்துக் கவக்கிச் சாப்பிட்டு வர இரத்த சாந்தி உடனே நிற்கும்.

காக்காய் வலிப்புக்கு…

வெள்ளை வெங்காயத்தைத் தட்டிச் சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டால் வலிப்பு அடங்கி விடும்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img