திட்டுத் திட்டாக தோலின் நிறம் மாறினால்…
நாயுருவி இலை ஒரு கைப்பிடி எடுத்து, ஜாதிக்காய் சேர்த்து மை
போல் அரைத்து நிறம் மாறியுள்ள பகுதியில் தடவி வர இத்திட்டுக்கள்
மறையும். சில நாள்களில் உடல் இயல்பான நிறத்திற்குத் திரும்பும்.
தாய்ப்பால் பெருக…
சந்திரவள்ளி என்ற மூவிகைச் செடியின் கிழங்கை சிறிதளவு எடுத்து
இடித்து நீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி காலையிலும், மாலையிலும் அரை
தம்ளர் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து பருகி வர தாய்ப்பால் பெருகும்.
கண் சிவப்பு மாற…
புளியம் பூவை நசுக்கி சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து ஆறிய
பிறகு அதனை கண்களைச் சுற்றித் தடவி வர கண் சிவப்பு மாறும்.
மல்லிகைப் பூவை கசக்கி இரண்டு துளிகள் கண்களில் விட கண் பூக்கள்
மறையும்.
வாய்ப்புண், நாக்குப் புண் சரியாக…
அகத்திக்கீரை, மணத்தக்காளிக் கீரை இவற்றை மிளகாய், மிளகு
சேர்க்காமல் பக்குவம் செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண், நாக்குப் புண்
குணமாகும். தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட புண்கள் விரைவாக
குணமாகும்.
சொறி, சிரங்கு வராமல் இருக்க…
முட்டைக்கோஸ். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி. கொத்து
மல்லிக் கீரை, மணித்தக்காளிக் கீரை இவற்றை சாப்பிட்டு வர சொறி
சிரங்கு அணுகாது.