![அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா..! 1 health tips](https://dhinasari.com/wp-content/uploads/2021/12/health-tips.jpg)
ஆஸ்துமாவுக்கு…
அருகம்புல் கைப்பிடியளவு, மிளகு, வெற்றிலை எடுத்து இடித்து 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.’
வில்வ இலை 9. மிளகு 6 இரண்டையும் பால் விட்டரைத்து ஒரு டம்ளர் பாலில் போட்டுக் காய்ச்சி காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு இந்தக் கஷாயத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் குடித்து வர வேண்டும்.
இத்துடன் ஒன்பது துளசி இலைகளை ஒரு டம்ளர் காய்ச்சி ஆறிய நீரில் போட்டு வைத்து பகல் உணவுக்கு முன் இந்த நீரை குடித்து விட்டு பிறகு சாப்பிடவும். இந்த மருந்து சாப்பிடும் போது சைவ உணவே சாப்பிட வேண்டும்.
கரிசலாங்கண்ணி செடிகளை வேரோடு பிடுங்கி சுத்தம் செய்து உரலில் போட்டிடித்து சாறெடுத்து நல்வெண்ணெயுடன் கலந்து தைவம் காய்ச்சி வைத்துக் கொண்டு காலை, மாலை இரவு வேளைகளில் ஒரு ஸ்பூன் அளவு காப்பியில் சாப்பிட்டு வர வேண்டும். சைவ உணவே சாப்பிட்டு வர குணமாகும்.
மிளகாய்ச் செடியின் இலை 10 கி. நொச்சி கொழுந்து இலை 10 கி. வெற்றிலை 10 கி.மிளகு 5 கி எடுத்து மைய அரைத்து சுண்டைக் காயளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வர குணமாகும்.
கண்டங்கத்திரிச் செடியை வேருடன் சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து 100 கிராம் பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து கலந்து வைத்துக் கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.