பள்ளி மாணவிகள் முன் ஆபாசமாக நின்றதாக மலையாள சினிமா நடிகர் கைது

Published:

திருவனந்தபுரம்:

கேரளாவில் பள்ளி மாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக பிரபல மலையாள நடிகர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் ஒற்றப்பாலம் அருகே பத்திரிப்பாலா பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், கடந்த 27 ஆம் தேதி பள்ளி மாணவிகள் சிலர் பேருந்துக்காக காத்திருந்த போது, மாணவிகள் அருகே கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அப்போது காரின் உள்ளே இருந்த நபர் ஒருவர் மாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்தது மட்டுமில்லாமல், செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனால் மாணவிகள் காரின் எண்ணை குறித்து போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரணையில் அது மலையாள வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவியின் கார் என தெரியவந்தது. இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீஜித் ரவியோ அது தான் இல்லை எனவும், நானாக இருந்தால் மாணவிகள் தன்னை எளிதில் அடையாளம் கண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் வண்டி எண் தன்னுடையது தான், ஆனால் மாணவிகள் தவறாக வண்டி எண்ணைக் குறித்திருக்கலாம் எனவும், இந்தச் சம்பவத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என கூறினார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இந்த நிலையில் நேற்று நடிகர் ஸ்ரீஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது, கைது செய்யபட்டுள்ளார். ஸ்ரீஜித் கும்கி , வேட்டை உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்

Related articles

Recent articles

spot_img