பிற நாடுகளைப் போல் இந்தியாவில் உள்நாட்டு பயங்கரவாதம் தலைதூக்கவில்லை: பிரணாப் முகர்ஜி

பிற நாடுகளில் காணப்படுவதைப் போல், இந்தியாவில் உள்நாட்டு பயங்கரவாதம் குறிப்பிட்டத்தக்க அளவு தலைதூக்கவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆசிரியர் தினச் சொற்பொழிவில் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் முகர்ஜி முன்னர் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான திங்கள்கிழமை (செப். 5), நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களிடையே பிரணாப் முகர்ஜி “சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

அப்போது அவர் பேசியது…

இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும் கவலையை ஏற்படுத்தக்கூடிய பல அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. எனினும், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை அவை பாதிக்கவில்லை. மதச்சார்பின்மை என்பது இந்தியர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட பல்வேறு வகையிலான பயங்கரவாதங்களால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிற நாடுகளில் காணப்படுவதைப் போல் உள்நாட்டிலேயே உருவான பயங்கரவாதம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத் தலைதூக்காமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கொள்கை மற்றும் நிர்வாகத் திறன் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. இந்தியர்களிடையே பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், உணவுகள் என்று ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. எனினும் நாம் அனைவரும் ஒரே அரசமைப்பின் கீழ் ஒன்றுபட்டுள்ளோம். இந்தப் பண்பு, உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

சுதந்திரத்துக்குப் பின் நாட்டில் மாநிலங்களை உருவாக்கியது, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாகும். தேசப் பிரிவினையின்போது தங்கள் வீடுகளை விட்டு துரத்தியடிக்கப்பட்ட மக்கள் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகினர். இதன் காரணமாக மதங்களுக்கிடையே விரோத உணர்வு ஏற்பட்டது. எனினும், இந்தப் பிரச்னை பெரிதாக வெடிக்காமல் நமது அரசியல் தலைவர்கள் பார்த்துக்கொண்டனர்.

இவ்வளவு பெரிய நாட்டில் ஜனநாயக முறையை வெற்றிகரமாக நிலைநாட்டியதன் மூலம் இந்தியா தனது அரசியல் உறுதியை நிலைநாட்டியுள்ளது.
தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, வேட்பாளர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளள்ளது. இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று மிகப் பெரிய அரசியல்வாதிகள்கூட மூளையைக் கசக்கி யோசிக்க வேண்டிய அளவுக்கு இந்தியாவில் ஜனநாயகம் மிக வலிமையாக உள்ளது என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories