பறந்து பறந்து ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடி பாக்கி: மற்ற அமைச்சகங்களுக்கு கடிதம்

Published:

air-india-flight புது தில்லி: ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் மேற்கொண்ட பயணங்களின் வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி ரூ.600 கோடி அளவுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சகங்களின் கவனத்துக்கு கடிதம் மூலம் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எடுத்துச் சென்றுள்ளது. பல கோடி ரூபாய் நஷ்டம் காரணமாக மூழ்கும் நிலையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தற்போது ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளதாம் . தொடர்ச்சியாக சந்தித்த நஷ்டங்களுக்கு பின்னர், கடந்த டிசம்பரில்தான் இந்த நிறுவனம் ரூ.14.6 கோடி நிகர லாபம் ஈட்டியதாக முன்னர் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img