அருண் ஜேட்லி மறைவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published:

arun jaitley - 2026
Arun _jaitley

அருண் ஜேட்லியின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் பாஜக தொண்டர்களுக்கும் நாட்டிற்கும் பேரிழப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் குறிப்பினை வெளியிட்டுள்ளார்.

இன்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக காலமான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவரது இரங்கல் செய்தியில்…

மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரியை அறிமுகப் படுத்தியவர்! நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர்!

கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர் அருண்ஜேட்லி! அவரது மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img