சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!

p chidambaram - 2026

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பில், தனக்கு முன்ஜாமீன் தர மறுத்த தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும், ஜாமீன் தேவை எனில் விசாரணை நீதிமன்றத்தையே சிதம்பரம் அணுகலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து, பல முறை இடைக்கால தடை விதித்து வந்தது நீதிமன்றம்! 25வது முறையாக இடைக்காலத் தடை விதிக்கப் படுமா என்று எதிர்பார்த்திருந்த நிலைஇல், திடீர் திருப்பமாக, சிதம்பரத்தை கொள்ளைக் கூட்டத் தலைவர் என்று வற்ணித்து, அவருக்கு இதற்கு மேல் முன்ஜாமீன் கொடுக்க இயலாது எனக் கூறி, சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதை அடுத்து அவர் சிபிஐ காவலில் எடுக்கப் பட்டு, வழக்கு குறித்து சிபிஐ., விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறியது சிபிஐ!

supreme court of india - 2026

உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டது! ஆனால், இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பே சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ., கட்டுப்பட்டில் காவல் வைக்கப் பட்டார்.

இந்நிலையில், சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் சிபிஐயால் சிதம்பரம் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், முன்ஜாமீன் கோரும் மனு பொருளற்றது என்று கூறி அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், சிதம்பரத்துக்கு ஜாமீன் தேவை என்றால் அவர் விசாரணை நீதிமன்றத்தையே அணுகலாம் என்று கூறினர்.

1 COMMENT

  1. செத்தாண்டா சிதம்பரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories