திருப்பதியில் ‘ரெட் அலர்ட்’! கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு!

Published:

tirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. திருப்பதி நகரின் சுற்றுப் பகுதிகள் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அண்மையில் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமானவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளால் திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் சித்தூர் அருகே உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ஆகியவற்றிக்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்று உளவுத் தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து திருப்பதி, காணிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை உளவுத்துறை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருப்பதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகப் படுத்தப் பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img