December 6, 2025, 3:57 AM
24.9 C
Chennai

கடைசிக் கட்டத்தில்… ‘விக்ரம் லேண்டர்’ தொடர்பை இழந்தது; இஸ்ரோ ஏமாற்றம்!

isro chandrayaan2 - 2025

பெங்களூரு: ‘சந்திரயான் – 2’ விண்கலத்தின் ‘லேண்டர்’ சாதனம் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் வருத்தத்துடன் வெளியிட்டார். இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரிதும் சோகம் அடைந்தனர்.

சந்திரயான் – 2 விண்கலத்தின் ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் காண கர்நாடக மாநிலம் பெங்களூரு பீன்யாவிலுள்ள இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இதனை நேரடியாகக் காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூருக்கு வந்திருந்தார்.

மேலும் இந்த நிகழ்வைக் காண்பதற்கான எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ – மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களும் பெங்களூரு மையத்துக்கு வந்திருந்தனர்.

நள்ளிரவு நேரம் என்ற நிலையில் அதையும் கடந்து, பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். லேண்டர் சாதனம் நிலவில் தரையிறக்குவது மிகவும் சவாலான பணி என்பதால், பிரதமர், விஞ்ஞானிகள் என அனைவரும் சற்று பதற்ற மனநிலையிலேயே இருந்தனர்.

modi isro2 - 2025

இன்று அதிகாலை 2.15 மணி அளவில் ‘லேண்டர்’ சாதனம் விக்ரம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டது.

திட்டத்தின் படி தரை இறங்க வேண்டிய லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்கும் முன் 2.1 கி.மீ., தொலைவில் தனது சிக்னலை இழந்தது.

chandrayaan2 isro - 2025

இதனை வருத்தத்துடன் அறிவித்தார் இஸ்ரோ தலைவர் சிவன். இதைக் கேட்டு பிரதமர் மோடி, ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என்று கூறி, விஞ்ஞானிகளுக்கு தைரியம் அளித்தார் பிரதமர் மோடி.

அப்போது அவர், இஸ்ரோ விஞ்ஞானிகளை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது. வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். நம்பிக்கையுடன் இருங்கள்; நாம் சாதித்தது சாதாரண விஷயமில்லை. முன்னேறிச் செல்லுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள். நம்பிக்கையுடனும், கடின உழைப்புடனும் நமது விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று கூறிவிட்டு, பின்னர் இஸ்ரோவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

chandrayaan2 isro1 - 2025

அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் இது குறித்து கூறிய போது, நிலவின் பரப்பிலிருந்து 2.1 கிமீ., வரை விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தது போல் பயணித்தது! அதன்பின் விக்ரம் ‘லேண்டர்’ உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதற்கான காரணங்களை ஆராயவுள்ளோம். .. என்று கூறினார்.

விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்ட போது, சந்திரயான்- 2 திட்டத்தின் மூலம் இஸ்ரோ தனது தைரியத்தையும், முன்மாதிரியான அர்ப்பணிப்பையும் காட்டியுள்ளது.. இஸ்ரோ குறித்து நாடே பெருமிதம் கொள்கிறது… என்று கூறினார்.

சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் தனது டிவிட்டர் பதிவில், சந்திராயன்-2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது என்று கூறினார்.

சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலில், சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல. லேண்டர் உடனான தொடர்பு மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது. லேண்டர் சிக்னலை இழந்தாலும், ஆர்பிட்டர் இப்போதும் இஸ்ரோ உடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்ந்து நிலவின் தென் துருவத்துக்கு மேலாகச் சுற்றி வந்து கொண்டிருக்கும். நாம் எதிர்பார்த்தபடி, தொடர்ந்து நிலவின் மேல் பரப்பை ஆராயும் என கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories