December 5, 2025, 7:15 PM
26.7 C
Chennai

காதலை கண்டித்த குடும்பத்தை க்ளோஸ் செய்ய திட்டம்! காதலனுடன் தப்பி ஓட்டம்!

love - 2025

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், தனது பெற்றோர், அண்ணன்கள், சகோதரிகளுக்கு விஷம் கலந்து உணவைக் கொடுத்துவிட்டு தப்பிய இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள மைனாதர் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் என்பவரை காதலித்து வந்தார். அந்தப் பெண்ணுக்கு இன்னும் 18 வயது நிரம்பாத நிலையில், இவர்கள் காதலை பெற்றோர் கண்டித்தனர்.

கடந்த ஆண்டு, தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அரவிந்த்குமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், இப்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அவர், தங்கள் காதலுக்கு யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று மிரட்டியுள்ளார்.

poison - 2025

இந்தப் பிரச்னைக்குப் பிறகும் அவர்கள் தங்கள் காதலை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அப்பா, அம்மா, அண்ணன்கள், 2 சகோதரிகள், பக்கத்துவீட்டுப் பெண் ஆகியோரை விஷம் வைத்து கொல்ல முடிவு செய்தார் அந்தச் சிறுமி.

இதற்காக ரகசியமாக விஷத்தை வாங்கி வைத்திருந்தார். உணவில் அதைக் கலக்கி வைத்துவிட்டடார். அவர் சமைத்த உணவை உண்ட அனைவரும் மயங்கிவிட, வீட்டில் இருந்து காதலருடன் ஓடிவிட்டார் சிறுமி.

இதையடுத்து தற்செயலாக அங்கு வந்த ஒருவர், இவர்கள் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்..

அப்போது அவர்கள் விஷம் கலந்த உணவை உட்கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து காவல்துறையினர், அந்தச் சிறுமியையும் காதலனையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories