சிதம்பரத்தை அடுத்து… சிக்கும் கனிமொழி, ஆ.ராசா! தண்டனை விதித்தவர் கையில் 2ஜி வழக்கு விஸ்வரூபம்!

a raja kanimozhi - 2026

மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரத்தை அடுத்து, இப்போது மக்களவை உறுப்பினர் ஆக உள்ள கனிமொழியும், ஆ.ராசாவும் வசமாகச் சிக்குகின்றனர். 2ஜி வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது, அதுவும் ப.சிதம்பரத்தை தண்டித்த நீதிபதியின் கையில்!

2 ஜி தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லி பாட்டியாலா ஹவுஸ் – சிபிஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஓ.பி.சைனி விசாரித்து வந்த 2ஜி வழக்கில், பல்வேறு திருப்பங்களும், உறுதிப் படுத்த இயலாத வகையில் சிபிஐ.,க்கு பின்னடைவும் ஏற்படுத்தப் பட்டது. இந்த வழக்கில், நிரூபிக்கத் தகுந்த வாதத்துக்காக தாம் இத்தனை நாள் காத்திருந்ததாகவும், சிபிஐ.,யினால் தமக்கு நம்புவதற்குரிய வகையில் எதையும் சமர்ப்பிக்க இயலவில்லை என்றும் கூறி, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து 2ஜி வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிப்பதாக தெரிவித்தார் ஓ.பி.சைனி.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆனால், சிபிஐ., தரப்பு மேல் முறையீடு செய்யும் என்று கூறி வந்தது. தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றம் இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையை தற்போதைய சிபிஐ., நீதிபதி அஜய் குமார் குஹார் வசம் ஒப்படைப்பதாகக் கூறியது.

முன்னர் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த போதெல்லாம், அவருக்கு சிபிஐ கைது செய்து விசாரிப்பதில் இருந்து வாய்தா அளித்து, முன் ஜாமீன் வழங்கி, நீட்டித்தும் வந்ததார் நீதிபதி ஓ.பி.சைனி.

opsaini cbi special court judge - 2026

இந்நிலையில், அந்த வழக்கு ஓ.பி.சைனியிடம் இருந்து அஜய் குமார் குஹார் வசம் வந்த போது, திடீரென அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப் பட்டதுடன், இது போன்ற கொள்ளைக்கூட்டத் தலைவர்களுக்கெல்லாம் முன் ஜாமீன் வழங்குவது மிகத் தவறு என்ற ரீதியில் கருத்தும் தெரிவித்து, தற்போது ப.சிதம்பரம் திஹார் சிறையில் காலம் தள்ளுவதற்குக் காரணமாக அமைந்தார் நீதிபதி அஜய் குமார் குஹார்..

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

மேலும், கர்நாடக காங்கிரஸில் பெரும் செல்வாக்கும் செல்வ வளமும் பெற்றவராகத் திகழும் டி.கே.சிவகுமாரின் ஊழல்களைத் தகுந்த வகையில் விசாரிக்க நீதிபதி அஜய் குமார் குஹார் சாட்டையைச் சுழற்றியுள்ளார். அதனாலேயே அவரும் சிபிஐயின் வசம் சிக்கியுள்ளார்.

தற்போது, தில்லி உயர் நீதிமன்றம் அதே போல் ஓ.பி.சைனியிடம் இருந்து வழக்கை அஜய் குமார் குஹாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், இந்த வழக்கை நேர்மையான முறையில் மீண்டும் தூசு தட்டி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என்று தெரிகிறது.

இந்தச் செய்தி கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. நீதிபதி ஓ.பி. சைனி இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING: 2G spectrum cases pending in the court of Special CBI judge OP Saini have been transferred to Special CBI judge Ajay Kumar Kuhar – the same judge who is currently hearing ongoing cases against P. Chidambaram and DK Shivakumar.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories