சிதம்பரத்தை அடுத்து… சிக்கும் கனிமொழி, ஆ.ராசா! தண்டனை விதித்தவர் கையில் 2ஜி வழக்கு விஸ்வரூபம்!

a raja kanimozhi - 2026

மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரத்தை அடுத்து, இப்போது மக்களவை உறுப்பினர் ஆக உள்ள கனிமொழியும், ஆ.ராசாவும் வசமாகச் சிக்குகின்றனர். 2ஜி வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது, அதுவும் ப.சிதம்பரத்தை தண்டித்த நீதிபதியின் கையில்!

2 ஜி தொடர்பான அத்தனை வழக்குகளையும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லி பாட்டியாலா ஹவுஸ் – சிபிஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஓ.பி.சைனி விசாரித்து வந்த 2ஜி வழக்கில், பல்வேறு திருப்பங்களும், உறுதிப் படுத்த இயலாத வகையில் சிபிஐ.,க்கு பின்னடைவும் ஏற்படுத்தப் பட்டது. இந்த வழக்கில், நிரூபிக்கத் தகுந்த வாதத்துக்காக தாம் இத்தனை நாள் காத்திருந்ததாகவும், சிபிஐ.,யினால் தமக்கு நம்புவதற்குரிய வகையில் எதையும் சமர்ப்பிக்க இயலவில்லை என்றும் கூறி, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து 2ஜி வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிப்பதாக தெரிவித்தார் ஓ.பி.சைனி.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

ஆனால், சிபிஐ., தரப்பு மேல் முறையீடு செய்யும் என்று கூறி வந்தது. தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றம் இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையை தற்போதைய சிபிஐ., நீதிபதி அஜய் குமார் குஹார் வசம் ஒப்படைப்பதாகக் கூறியது.

முன்னர் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த போதெல்லாம், அவருக்கு சிபிஐ கைது செய்து விசாரிப்பதில் இருந்து வாய்தா அளித்து, முன் ஜாமீன் வழங்கி, நீட்டித்தும் வந்ததார் நீதிபதி ஓ.பி.சைனி.

opsaini cbi special court judge - 2026

இந்நிலையில், அந்த வழக்கு ஓ.பி.சைனியிடம் இருந்து அஜய் குமார் குஹார் வசம் வந்த போது, திடீரென அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப் பட்டதுடன், இது போன்ற கொள்ளைக்கூட்டத் தலைவர்களுக்கெல்லாம் முன் ஜாமீன் வழங்குவது மிகத் தவறு என்ற ரீதியில் கருத்தும் தெரிவித்து, தற்போது ப.சிதம்பரம் திஹார் சிறையில் காலம் தள்ளுவதற்குக் காரணமாக அமைந்தார் நீதிபதி அஜய் குமார் குஹார்..

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மேலும், கர்நாடக காங்கிரஸில் பெரும் செல்வாக்கும் செல்வ வளமும் பெற்றவராகத் திகழும் டி.கே.சிவகுமாரின் ஊழல்களைத் தகுந்த வகையில் விசாரிக்க நீதிபதி அஜய் குமார் குஹார் சாட்டையைச் சுழற்றியுள்ளார். அதனாலேயே அவரும் சிபிஐயின் வசம் சிக்கியுள்ளார்.

தற்போது, தில்லி உயர் நீதிமன்றம் அதே போல் ஓ.பி.சைனியிடம் இருந்து வழக்கை அஜய் குமார் குஹாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், இந்த வழக்கை நேர்மையான முறையில் மீண்டும் தூசு தட்டி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என்று தெரிகிறது.

இந்தச் செய்தி கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. நீதிபதி ஓ.பி. சைனி இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING: 2G spectrum cases pending in the court of Special CBI judge OP Saini have been transferred to Special CBI judge Ajay Kumar Kuhar – the same judge who is currently hearing ongoing cases against P. Chidambaram and DK Shivakumar.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories