கோதாவரியில் படகு மூழ்கி 25 பேர் உயிரிழந்த விபத்து; தொடரும் மீட்புப் பணிகள்!

boat accident telangana - 2026

கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் அருகில் கோதாவரி நதியில் மூழ்கிய படகு விபத்தில் இதுவரை மூழ்கிய படகை மீட்க முடியாமல் அரசுத் தரப்பு திண்டாடி வருகிறது. 25 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கோதாவரி நதியில் அதிகவேக சுழலில் சிக்கி கச்சலூரு அருகில் தலைகீழாக கவிழ்ந்தது. படகு மூழ்கியதால் பயணிகள் தூக்கி எறியப்பட்டனர். விபத்து நடந்தபோது 73 பேர் படகில் இருந்து உள்ளனர். அவர்களில் 27 பேர் உயிர் காக்கும் உபகரணம் மூலம் (லைஃப் ஜாக்கெட்) மற்றும் உள்ளூர் வாசிகள் மூலம் உயிர் பிழைத்தனர்.

மீதியுள்ளவர்களை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது. இந்த விபத்தில் 46 பேர் இறந்துள்ளதாக தெரிகிறது.

கோதாவரி நதியில் பாபிகொண்டலு எனப்படும் புகழ்பெற்ற மலைகளுக்கு இடையில் ஆன நதியில் படகுப் பயணம் சுற்றுலா பயணிகளின் உற்சாகமான இடம். ‘கண்டிபோச்சம்மா’ ஆலயத்திலிருந்து அந்தப் படகு கிளம்பி ஒரு மணி நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது.

அதிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது படகு செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் 10 மீட்டர் வரை சுழல் உள்ளது. மிகப்பெரிய அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. படகு மூழ்கிய இடத்தில் கோதாவரி நதியின் ஆழம் 330 அடி. எனவே அந்தப் படகை வெளியே எடுப்பது அசாத்தியம் என்கின்றனர் வல்லுநர்கள்.

boat accident ap - 2026

60 அடி ஆழத்துக்கு மேல் கடல் உள் நீச்சலுக்குச் செல்பவர்கள் கூட செல்வது இயலாத காரியம் என்கின்றனர். நீரில் மூழ்கிய படகின் எடை 25 டன். நீரோட்டம் அங்கே அதி தீவிரமாக உள்ளது. செப்டம்பர் 15 அன்று இந்த விபத்து நடந்துள்ளது. இன்னும் தேடுதல் வேட்டையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளார்கள்.

இரு மலைகளுக்கிடையே வகுடு எடுத்தாற்போல் நதி செல்வதையே பாபிகொண்டலு என்பார்கள். பாபிடி என்றால் வகிடு என்று அர்த்தம். இது மிக முக்கியமான சுற்றுலாத்தலம். படகில் சென்று திரும்புவதே இதன் முக்கிய அம்சம்.

விபத்து ஏற்பட்ட படகுக்குச் சொந்தமானவர் விபத்து ஏற்பட்ட நிலையில் ஓடி ஒளிந்து விட்டார். அதிக அளவு பயணிகள் படகின் முதல் தளத்தில் ஏசி ரூமில் அடைபட்டுவிட்டதாக தெரிகிறது. அதனால் உடல்கள் வெளியே வரவில்லை எனக் கூறப் படுகிறது. நீரோட்டத்தின் கீழ்முகத்தில் வரலாம் என்ற யோசனையின் பேரில் அங்கு வலைகளை விரித்து தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories