இந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா!

amith sha - 2026

நாட்டின் இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவன் நான். பிற மொழி ஒன்று கற்க வேண்டுமானால் இந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்; பொது மொழி பற்றிய எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்தியைத் திணிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப் பட்டது. ஆனால் அதற்கு பதிலளித்த அமித் ஷா, மொழி அரசியலில் ஈடுபடுவோரை வன்மையாகக் கண்டித்ததுடன், தாம் கூறியதைத் தவறாக பிரசாரம் செய்வதாகவும் கூறியுள்ளார்.

அமித் ஷா நாட்டிற்கு பொதுவான மொழியைக் கோருவதாகவும், இந்தியின் பெயரை பொதுவான மொழி என முன்மொழிந்ததாகவும் ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் இருந்து குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

அமித் ஷாவின் இந்தக் கருத்தை கண்டிப்பதாக பலரும் கூற, இன்று ரஜினிகாந்த்தும் அது குறித்து விமர்சித்தார்! ஒரு பொதுவான மொழியை இந்தியாவில் செயல்படுத்த முடியாது என்று கூறினார் ரஜினிகாந்த்.

மொழிப் பிரச்னை நாட்டு மக்களை உசுப்பேற்றிய பரபரப்புக்கு இடையே அமித் ஷா ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வழியாக ஒரு விளக்கத்தை வெளியிட்டார்,
தாம் ஒருபோதும் மற்ற பிராந்திய மொழிகளுக்கு பதிலாக இந்தி திணிப்பை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்றும், ஒருவரின் தாய்மொழிக்குப் பிறகு இந்தியை இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்றும் கூறியதாக விளக்கியுள்ளார்.

தாமும் குஜராத்தில் இருந்து வந்தவரே என்றும், இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலம் குஜராத் என்றும், இந்தப் பிரச்னையில் மக்கள் வலுக்கட்டாயமாக அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories