December 5, 2025, 4:22 PM
27.9 C
Chennai

மோடியைச் சந்தித்து வாழ்த்திய மம்தா! கூழாங்கல் சகதி ரஸகுல்லா கொண்டுவரவில்லை!

modi mamta1 - 2025

தில்லி வந்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது என அதிகாரிகள் கூறினர்.

அண்மைக் காலமாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியில் ஆளும் பாஜக. என கடுமையாக சகட்டுமேனிக்கு விமர்சித்து வந்தார் மம்தா பானர்ஜி. சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு மேற்கு வங்கத்தில் கடும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடியை அவர் இன்று சந்தித்த போது, மோடிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், வழக்கம் போல், குர்தா மற்றும் இனிப்புக்களை பரிசாக வழங்கினார்.

ஒவ்வோர் ஆண்டும் நவராத்தி, தீபாவளி, மற்றும் மோடியின் பிறந்தநாள் ஆகிய முக்கிய நாட்களின் போது பிரதமர் மோடிக்கு குர்தா மற்றும் பெங்காலி இனிப்பு வகைகளை மம்தா வழங்குவது வழக்கம்தான். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, சகோதரி மம்தா தனக்கு குர்தா, ரசகுல்லாக்களை வருடந்தோறும் அனுப்பி வருகிறார் என்று உண்மையைப் போட்டுடைத்தார். ஆனால் அது தேர்தல் நேரம் என்பதால், மோடிக்கு எதிரான தீவிர அரசியலைச் செய்து வந்த மம்தா, இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

modi mamta - 2025

வாக்கு வங்கியை மனதில் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் போது, மோடி இவ்வாறு கூறியதால், கோபத்தில் இனி மேற்கு வங்கத்தின் சகதியில் ஊறிய கூழாங்கற்களை அனுப்பி வைப்பேன் என்று கூறினார் மம்தா. ஆனால் அதனை விரும்பி ஏற்பதாகக் கூறிய மோடி, அது ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாக்குர் என மகான்கள் வாழ்ந்த பூமியின் பிரசாதமாக ஏற்று உண்பேன் என்றார். இது வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பின்னர் வந்த தேர்தலில் பாஜக., எதிர்பாராத அளவுக்கு உறுப்பினர்களைப் பெற்று வெற்றி பெற்றது. இது மம்தா பானர்ஜிக்கு கடுக்காய் கொடுத்தது போல் ஆனது.

இந்நிலையில், இன்று மோடியை சந்தித்து நலம் விசாரித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நிதி குறித்து கோரிக்கை விடுத்தாராம்.

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மம்தா சந்திக்கிறார். இதுவும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப் படுகிறது.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் பெயரை பங்க்ளா என மாற்றுமாறு சட்ட மன்றத்தில் தீர்மானம் போடப் பட்டது. ஆனால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. எனவே, மாநிலத்தின் பெயர் மாற்றம், பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டது இவை குறித்து பேசுவதற்காகவே மம்தா பானர்ஜி பிரதமரை சந்திக்கிறார் என்று கூறப் பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தை உலுக்கிய சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரைக் காப்பாற்ற, மம்தா சில முயற்சிகளை எடுப்பதற்காகவே தில்லியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories