பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ‘குளோபல் கோல் கீப்பர்’ விருது!

modi goal keeper - 2026

அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவில் தூய்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக, பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேன்மைக்காக ‛துாய்மை இந்தியா’ திட்டத்தை தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டான கடந்த 2014ஆம் ஆண்டே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி விட்டார். இதன் மூலம், அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது ஆகியவை செயல்படுத்தப் படுகின்றன.

இவ்வாறு, ‛துாய்மை இந்தியா’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப் படும், குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.

global goalkeeper - 2026

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும், உலகின் செல்வந்தர்களில் ஒருவருமான பில்கேட்ஸின் ‘பில் – மெலின்டா கேட்ஸ்’ தொண்டு நிறுவனம் சார்பில் இந்த ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கப் பட்டது. இந்த விருதினை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸிடமிருந்து பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.

இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்த போது…. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நிறைவேற்றி, அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் ஏழை மக்களும் பெண்களும் அதிக பலன் பெற்றனர். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவோம்.

துப்புரவு இலக்கை அடைவது மட்டுமல்லாமல், ‘பிட் இந்தியா’ மூலம் உடலுறுதி மற்றும் உடல்நலனை பேணிக்காக்கவும் ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories