ஆர்.எஸ்.எஸ்., குறித்து பிரசாரம் செய்வதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒருபோதும் கைவிட்டுவிடக் கூடாது என்று கூறினார், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கிருஷ்ணகோபால் சர்மா.
செப்.28 சனிக்கிழமை நேற்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களில் ஒருவரான கிருஷ்ண கோபால் சர்மா, ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. எங்களுக்கு இந்த உலகில் உள்ள வேறு நாடுகள் எதிலும் கிளைகள் இல்லை. பாகிஸ்தானுக்கு எங்கள் மீது கோபம் இருக்குமானால், அது இந்தியாவின் மீது கோபம் கொள்கிறது என்று பொருள். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்தியா இரண்டும் நேரான பொருளைத் தரும் சொற்கள். நாங்களும் கூட, இந்த உலகம் இந்தியாவையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்று கூறினார்.
மேலும், ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்காக உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸும் இந்தியாவும் ஒன்று தான்! அப்படித்தான் பார்க்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அந்த வேலையை எங்களுக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிரமாதமாக செய்து வருகிறார். சர்வதேச அளவில் ஆர்.எஸ்.எஸ்ஸினைப் பரப்பும் பணியை இம்ரான்கான் ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது என்று மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் கிருஷ்ணகோபால் சர்மா வேண்டுகோள் விடுத்தார்.