December 5, 2025, 6:32 PM
26.7 C
Chennai

கம்புகள் உயர்ந்தன; தலைகள் உடைந்தன!தேவரகட்டு பன்னீ உத்ஸவத்தில் ரத்த ஆறு!

kurnool ap vijayadasami utsav3 - 2025

கர்னூலு – பன்னீ (bunny) உற்சவம் இந்த வருடமும் ரத்தத்தில் நனைந்தது… முன்னோர்களின் பரம்பரை வழிபாட்டு வழக்கம் என்று கூறி இந்தக் கொண்டாட்டங்களில் 11 கிராம மக்கள் கம்புகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.

தசரா பண்டிகையான விஜயதசமி அன்று தேவரகட்டு மலை அருகில் நடைபெறும் பன்னீ உத்ஸவம், போர்க்களத்தை நினைவூட்டுவது வழக்கம் . அதேபோல் இந்த விஜயதசமி அன்றும் செவ்வாய்க்கிழமை 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மலை அடிவாரத்தில் கூடி கம்புச் சண்டையில் ஈடுபட்டார்கள் .

இந்தச் சண்டையில் 60 பேருக்கு மேல் காயமடைந்தனர். அதில் நால்வரின் நிலைமை மோசமாக உள்ளது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

kurnool ap vijayadasami utsav4 - 2025

தேவரகட்டு மலையில் கோயில் கொண்டுள்ள மாலமல்லேஸ்வர ஸ்வாமி கல்யாண உத்ஸவத்தை ஒட்டி கழி யுத்தம் (கம்பு போர்) நிகழ்த்துவது வழக்கம். ஸ்வாமியின் உத்ஸவ விக்ரகத்தைப் பெற்றுக்கொள்வதில் போட்டியிடும் ஒரு பகுதியாக இந்த கம்புச் சண்டை நடத்தப் படுவது வழக்கம்.

கம்பு கழிகளோடும் தீவட்டிகளோடும் நள்ளிரவில் மலைகளின் இடையே தெய்வ விக்ரகங்களோடு கல்யாண உத்ஸவத்திற்கு புறப்படுவார்கள். அசுர விளையாட்டு போல ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு முன்னேறுவார்கள். இந்த விளையாட்டில் மனிதர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டுவதும் வழக்கமாகிப் போனது. இது இங்கு சர்வ சாதாரணம்.

kurnool ap vijayadasami utsav2 - 2025

இது போல் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள வேண்டாம் என்று போலீசாரும் தன்னார்வத் தொண்டர்களும் எத்தனை எச்சரித்தாலும் இங்குள்ள மக்கள் கேட்பதில்லை. இது எங்கள் பரம்பரை வழக்கம்…விடுவதற்கில்லை என்று கூறி ஒவ்வொரு ஆண்டும் இதே போல் மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள்.

தசரா என்றாலே கர்னுலு மாவட்ட வாசிகளுக்கு பன்னீ உற்சவமும் கம்புச் சண்டையும்தான் நினைவுக்கு வரும். இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்குமேல் பங்கேற்றதாகத் தெரிகிறது. விஜயதசமியை ஒட்டி கல்யாண உத்ஸவத்திற்குப் பிறகு கம்புச் சண்டை தீவிரமாக நடந்தது.

11 கிராம மக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அடித்துக் கொண்டார்கள். தேவரகட்டு பன்னீ உத்ஸவம் இவ்விதமாக, கம்புச்சண்டை என்றே மாறிவிட்டது. தசரா வருகிறது என்றாலே போதும் இந்த கழி யுத்தம் தான் நினைவுக்கு வரும்! கடந்த சில வருடங்களாக இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று போலீசார் முயற்சித்து வந்தாலும் அது எடுபடவில்லை. இதில் மது அருந்திவிட்டு போதையில் மோதும் வழக்கமும் தீவிரமாக உள்ளது.

kurnool ap vijayadasami utsav1 - 2025

செவ்வாயன்று நடந்த பன்னீ உற்சவத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் பங்கு கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் எஸ்பி பகீரப்பா போன்றோர் அருகில் இருந்து நிலைமையை கண்காணித்தனர். சிசிடிவி கேமரா, ட்ரோன் கேமரா பால்கன் வாகனங்களோடு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

ஆயிரம் பேருக்கு மேல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை, ப்ளெக்ஸ் பேனர்கள், டாக்குமென்டரிகள் மூலம் செய்திருந்தார்கள். ஆனாலும், மக்கள் அதையெல்லாம் கேட்பதில்லை. தங்கள் பாரம்பரிய நிகழ்ச்சி இது என்று வழக்கம் போல் இந்த ஆண்டும் கம்புகளால் தாக்கி மண்டையை உடைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories