December 6, 2025, 3:09 AM
24.9 C
Chennai

மே.வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ஈவிரக்கமற்ற படுகொலை: ராமகோபாலன் கண்டனம்!

ramagopalan - 2025

மேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. என்று அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார் இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்… மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக இருந்த, பள்ளி ஆசிரியர் திரு. சுப்ரியோ பானர்ஜி, மற்றும் அவரது குழந்தை, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்தக் கொடூர செயலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருகிறது, மாநில அரசுகள், மதத்தின் பெயரால் கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சுயலாபத்திற்காக வழக்கை இழுத்தடிப்பதாலும், நீர்த்துப்போக செய்வதாலும் குற்றவாளிகளுக்கு பயமில்லாமல் போகிறது. இஸ்லாமிய மதவாதிகள் மூளை சலவை செய்து கொடூர செயலை செய்ய தூண்டுகிறார்கள். இது போன்ற கொடூரமான சம்பவங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன.

bengal family murdered - 2025

இத்தகைய கொடூர செயல்களை செய்பவர்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள், குற்றவாளிகளுக்கு உதவுபவர்கள், குற்றவாளிகள் மறைந்திருக்க இடமும் பொருள் உதவியும் அளிப்பவர்கள் ஆகியோரும் தண்டிக்கும்போது மட்டுமே இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்க முடியும்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தாலும், மதபயங்கரவாதிகளால் செய்யப்படும் தனிப்பட்ட முறையிலான கொலைகள் தொடர நமது நாட்டு நீதி பரிபாலனத்தின் பலவீனமும் காரணமாக இருக்கிறது என்பது வேதனையான உண்மை.

நமது தமிழகத்தில், தஞ்சையில் ராமலிங்கம் என்பவர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஓராண்டாக வழக்கு விசாரணை அளவிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இதுபோன்ற செயல்பாட்டால் குற்றவாளிகளுக்கு, பயம் விட்டுப்போகிறது.

murdered man - 2025

மேலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்படும் அவலம் நீடிக்கிறது. குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதும், தாக்குவதும் எந்த அளவு குற்றவாளிகள் தைரியமாக செயல்பட முடிகிறது என்பதற்கு அவை எடுத்துக்காட்டாகும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற கொடூர தாக்குதல் தொடர்கிறது என்பதை கவனத்தில்கொண்டு, குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மாநில காவல்துறைக்கு வழிகாட்டுவதன் மூலம் மத பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேற்கு வங்க மாநில அரசு, குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories